மேலும் அறிய

Hindu Temple Dubai: தசரா பண்டிகை: துபாயில் இன்று திறப்புவிழா காணும் இந்து கோயில்: சிறப்புகள் என்ன?

துபாய் நாட்டின் ஜெபல் அலி என்ற பகுதியில் கட்டப்பட்டுவந்த இந்து கோயில் இன்று திறப்புவிழா காண்கிறது. தசரா விழாவை ஒட்டி இந்துக் கோயில் இன்று திறக்கப்படுகிறது.

துபாய் நாட்டின் ஜெபல் அலி என்ற பகுதியில் கட்டப்பட்டுவந்த இந்து கோயில் இன்று திறப்புவிழா காண்கிறது. தசரா விழாவை ஒட்டி இந்துக் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இந்த திறப்புவிழாவில் துபாயின் சகிப்புத்தன்மை மற்றும் ஒத்துவாழ்தல் துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் கலந்து கொள்கிறார். அவருடன் ஐக்கிய அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொள்கிறார்.

இந்தக் கோயில் சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் தான். சிந்தி குரு தர்பார் கோயில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பழமையான இந்து கோயிலாகும். இந்தக் கோயிலுக்கான அடிக்கல் பிப்ரவரி 2020ல் நாட்டப்பட்டது. இந்தக் கோயில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக திறக்கப்படும். இந்தக் கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மத மக்களும் வரலாம். கோயிலில் உள்ள 16 தெய்வங்களின் சிலை வைக்கப்பட்டுள்ளது.  இந்த கோயில் வெள்ளை சலவைக் கற்களாலும் அலங்கார தூண்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. அரபி மற்றும் இந்து கட்டிடக் கலைகள் இணைந்து கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hindu Temple Dubai (@hindutempledubai)

கோயில் நிர்வாகம் சார்பில்  QR-code அடிப்படையில் தரிசனத்துக்கான புக்கிங் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம் என்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயிலின் பிரதான பிரார்த்தனைக் கூடத்திலேயே நிறைய கடவுளரின் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன. 3டி ப்ரின்டட் பிங்க் லோட்டஸ் மத்திய கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. துபாயின் பிரதான இந்துக் கோயிலான இக்கோயில் தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கோயிலில் தரிசனம் மேற்கொள்ள விரும்புவோர் நாளை முதல் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம். கோயிலில் 1000 முதல் 1200 பேர் வரை தினமும் தரிசனம் மேற்கொள்ளலாம். இந்தக் கோயில் ஜெபல் அலி என்ற இடத்தில் வொர்ஷிப் வில்லேஜ் 'Worship Village' என்ற பெயரில் அமையப்பெற்றுள்ளது.
இந்தக் கோயிலில் சீக்கியர்களின் புனித நூலான குரு க்ரந்த் சாஹிப் நூலும் இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
Embed widget