மேலும் அறிய

இந்து பெண் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்: முஸ்லீம் ஆணுடன் திருமணம்: பாகிஸ்தானில் பதற்றம்

ஏற்கெனவே 15 வயது இந்து பெண் ஒருவர் 50 வயது முஸ்லீம் ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 10 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, ஒரு முஸ்லீம் நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் அதிகாரிகள் சிறுமியை காப்பாற்றியுள்ளனர். பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் சிறு வயதுக்குட்பட்ட இந்துப் பெண்களைக் கடத்துவது, கட்டாய மதமாற்றம் செய்வது மற்றும் திருமணம் செய்வது போன்ற பிரச்சனைக்குரிய போக்கை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

இதுகுறித்து சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக வாதிடும் என்ஜிஓ அமைப்பான பாகிஸ்தான் தாராவர் இட்டேஹாட்டின் தலைவர் ஷிவா கச்சியின் கூறுகையில், “ஏற்கெனவே 15 வயது இந்து பெண் ஒருவர் 50 வயது முஸ்லீம் ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவளை இன்னும் காணவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீதி கேட்கும் போது நீதிமன்றத்தில் சில காவல்துறை அதிகாரிகள் போலி ஆவணங்களை உருவாக்கி அடிக்கடி தீயவர்களுக்கு துணை போகின்றனர்” எனத் தெரிவித்தார். 

சமீபத்தில் மிர்புர்காஸில் உள்ள கோட் குலாம் முஹம்மது கிராமத்தில் 10 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளார். சிறுமி தனது வீட்டிற்கு வெளியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு சிர்ஹண்டி ஏர் சமரோ செமினரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஷாஹித் தல்பூர் என்ற நபருடன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், உள்ளூர் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, சிறுமி மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே 15 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனதாகவும், அவரை கடத்தியவர்கள் அவருக்கு 20 வயது என்று போலி திருமணம் மற்றும் மதமாற்றச் சான்றிதழ்களை தயாரித்து அளித்திருப்பதும் தெரிய வந்தது. 

இந்த ஆண்டு ஜூன் மாதம், 14 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, ஒரு முஸ்லீம் நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். சிந்துவின் பெனாசிராபாத் மாவட்டத்தில் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் துப்பாக்கி முனையில் அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானிய நீதிமன்றம் அவளை பெற்றோரிடம் அனுப்ப மறுத்தது. சிறுமியின் எதிர்ப்பு மற்றும் அவளை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்தியில் நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது.

மார்ச் மாதத்தில் இருந்து மற்றொரு வழக்கில், சிந்துவின் ரோஹ்ரி நகரத்தைச் சேர்ந்த ஒரு இந்து பெண் உள்ளூர் லஷாரி பழங்குடியினரின் கடத்தல் மற்றும் மதமாற்ற முயற்சியை எதிர்த்ததற்காக கொல்லப்பட்டார். காவல்துறையினரிடம் இருந்து தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
Embed widget