மேலும் அறிய

ஆட்டம் காணும் அல்-கொய்தா அமைப்பு: அடுத்த டார்கெட் இவர்தான்.. இந்தியாவை எச்சரிக்கும் உளவுத்துறை!

பிறந்தது முதல் பெஹளா பகுதியில் வசித்து வந்த கங்குலி மத்திய கொல்கத்தா பகுதியில் சுமார் 16,992 சதுர அடிகள் பரப்பளவிலான மிகப்பெரிய வீட்டை சுமார் 40 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளார்.

அல்-கொய்தா தலைவர் அய்மன்-அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த உடனேயே அடுத்த அல்-கொய்தா தலைவருக்கு டார்கெட் வைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அய்மன்-அல்-ஜவாஹிரி

உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முழு காரணம் அல்-கொய்தா பயங்கர அமைப்பு என்பது அனைவரும் அறிந்தது. ஒசாமா பின் லேடன், அவரது நண்பர் அய்மன்-அல்-ஜவாஹிரி உள்ளிட்டோர் தான் இந்த தாக்குதலை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் நடந்த பின்னர் சுமார் 10 ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கா ஒசாமா பின்லேடனை கொன்றது. அவருக்குப் பின்னர், அல் கொய்தா அமைப்பின் தலைவராக அய்மன்-அல்-ஜவாஹிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் இவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதாலும் அல்-கொய்தா வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதாலும் அமெரிக்கா இவரைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தேடி வந்தது.

இந்த நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலில் ஒரு வீட்டில் வசித்து வந்த அய்மன்-அல்-ஜவாஹிரியை சத்தமில்லாமல் கொலை செய்துள்ளது அமெரிக்கா.

ஆட்டம் காணும் அல்-கொய்தா அமைப்பு: அடுத்த டார்கெட் இவர்தான்.. இந்தியாவை எச்சரிக்கும் உளவுத்துறை!

சைப்-அல்-அதல்

இந்நிலையில் இந்த செய்தியை அறிவித்த உடனேயே அடுத்ததாக எகிப்தின் அல்-கொய்தா தலைவர் சைப்-அல்-அதலுக்கு டார்கெட் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன. அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்கிற தகவல்கள் ஏதும் உறுதியாக இல்லாத நிலையில், ஈரானில் இருப்பதாக பல நாட்களுக்கு முன்பு ஒரு வதந்தி பரவி வந்தது. அல்-ஜவாஹிரியின் மரணம் அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் அல்-கொய்தா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், அவர்கள் கோபம் கொண்டு வெகுண்டெழவும் வாய்ப்புண்டு என்று ஒரு புறம் கவலை தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள் : மீண்டும் ஒரு போரா? தைவானில் கால்பதித்த நான்சி பெலோசி! சீறும் சீனா.. உச்சக்கட்ட பதற்றம்..

பெரிய தாக்குதல்கள் இருக்கலாம்

உலக அளவிலான தீவிரவாதத்தை உற்றுநோக்கும் அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, இஸ்லாமிய நாடுகள் கோரோசன் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அவர்களுடைய ஆயுத பலத்தை வைத்து கணக்கிட்டால், வரும் காலங்களில் பெரிய தாக்குதல்களுக்கு வாய்பிருப்பதாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அல்கொய்தாவின் செயல்பாடுகளை இந்திய உளவுத்துறை கூர்ந்து கவனித்து வருகிறது. 1998ல் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்களை முன்னின்று நடத்தியவர் மற்றும் எகிப்திய சிறப்புப் படையின் முன்னாள் லெப்டினன்ட் கர்னல்தான் அதல். இவர் 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுடன் போரிட்டது மற்றும் 9/11 தாக்குதலில் ஈடுபட்ட சில கடத்தல்காரர்களுக்கு பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆட்டம் காணும் அல்-கொய்தா அமைப்பு: அடுத்த டார்கெட் இவர்தான்.. இந்தியாவை எச்சரிக்கும் உளவுத்துறை!

இந்தியாவில் அல்-கொய்தா

ஜவஹாரியின் மரணம் குறித்து இந்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் இதுவரை இல்லை. இருப்பினும், ஜவாஹிரியின் மரணம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அல் கொய்தா (AQIS) மற்றும் அன்சார் அல்-இஸ்லாம் (AAI) போன்றவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஐநா தடைகள் கண்காணிப்பு குழுவின் சமீபத்திய அறிக்கை, AQIS இல் 180-400 போர் விமானங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முதன்மையாக பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இவைகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எச்சரிக்கை

தாலிபன் போர் பிரிவுகளில் AQIS போராளிகளும் குறிப்பிடப்படுகின்றனர். ஒசாமா மெஹ்மூத் மற்றும் அவரது துணை அதிப் யஹ்யா கௌரி ஆகியோரால் இந்த இணைப்பானது பல ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் உள்ள அல்கொய்தா போராளிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் இருப்பதாக உளவுத்துறை அமைப்புகளுக்கு சமீபத்தில் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முகமது நபிக்கு எதிராக கருத்து கூறப்பட்ட சர்ச்சைக்குப் பிறகு இந்த நடவடிக்கைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Embed widget