US president: பேரதிர்ச்சி..! நோபல் பரிசு வென்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் காலமானார் - குவியும் இரங்கல்
US president Jimmy Carter Died: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், வயது மூப்பு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

US president Jimmy Carter Died: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், தனது 100வது வயதில் காலமானார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் காலமானார்:
கடந்த ஆண்டு முதலே அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜியாவில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது உயிர் பிரிந்த்துள்ளது. அமெரிக்காவின் 39வது அதிபராக, 1971 முதல் 1981 வரை ஜிம்மி கார்ட்டர் பதவி வகித்தார். அவருடைய நேர்மை மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்காக பரவலான பாராட்டைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பணிக்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜிம்மி கார்ட்டரின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: Former President Jimmy Carter has passed away at the age of 100.
— Collin Rugg (@CollinRugg) December 29, 2024
The 39th President had entered hospice care back in February 2023.
Rest in peace! pic.twitter.com/S0chIsRRCE
நேர்மையான அதிபர்:
ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் பிறந்த கார்ட்டரின் பணிவு மற்றும் பொது சேவையில் இருந்த அர்ப்பணிப்பானது அவரை அதிபர் பதவி வரை உயர்த்தியது. பொறியாளர் படிப்பை முடித்து ஜார்ஜியா கவர்னராக இருந்த கார்ட்டர், 1976 அதிபர் போட்டியில் நுழைந்தார். வாட்டர்கேட் ஊழல் மற்றும் வியட்நாம் போரிலிருந்து மீண்டு வரும் ஒரு தேசத்தின் மக்களிடையே "நான் எப்போதாவது பொய் சொன்னால், எப்போதாவது தவறான அறிக்கையை வெளியிட்டால், எனக்கு வாக்களிக்க வேண்டாம்" என அவர் எடுத்த உறுதிமொழியில் மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது. கார்டரின் பிரச்சாரம், பொது நிதியுதவி மற்றும் வெளிப்படைத்தன்மையை மையமாகக் கொண்டது. அவர் ஜெரால்ட் ஃபோர்டை வீழ்த்தி அதிபரானார். இருப்பினும், அவரது அதிபர் பதவி வெற்றிகள் மற்றும் சோதனைகளின் கலவையாக இருந்தது.
பொதுசேவைக்கு அர்பணிப்பு:
கார்டரின் செல்வாக்கு அவரது அதிபர் பதவியயும் கடந்து பிரபலமானது. 1982 இல் நிறுவப்பட்ட கார்ட்டர் மையத்தின் மூலம், உலகின் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களில் சிலவற்றில் மோதல்களைத் தீர்ப்பதற்கும், தேர்தல்களைக் கண்காணிப்பதற்கும், நோய்களை ஒழிப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இந்த முயற்சிகள் அவருக்கு ஒரு மனிதாபிமான தலைவராக உலகளாவிய மரியாதையை பெற்றுத்தந்தது.
அவரது 2020 ஆம் ஆண்டு நினைவுக் குறிப்பான வெள்ளை மாளிகை நாளிதழில் , கார்ட்டர் தனது "மைக்ரோமேனேஜிங்" போக்குகள் மற்றும் வாஷிங்டனின் அரசியல் ஸ்தாபனத்துடனான போராட்டங்களை ஒப்புக்கொண்டு, அவர் பதவியில் இருந்த நேரத்தை வெளிப்படுத்தினார். ஊடகங்கள் மற்றும் பரப்புரையாளர்களுடனான தனது சிரமங்களை அவர் நேர்மையாக ஒப்புக்கொண்டார். அவை தனது நிர்வாகத்தின் செயல்திறனை அடிக்கடி தடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்..

