மேலும் அறிய

மீண்டும் கம்பேக் கொடுத்த மகிந்த ராஜபக்சே.. இலங்கை அரசியலில் செம்ம ட்விஸ்ட்

ஊழல் குற்றச்சாட்டு, போர் குற்றச்சாட்டு, இலங்கை பொருளாதார நெருக்கடி என பல சவால்களுக்கு மத்தியிலும் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சே.

இலங்கை அரசியலில் அதிகாரமிக்க நபர்களில் ஒருவர் மகிந்த ராஜபக்சே. அவரது கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில், இலங்கை அதிபராகவும் 2002 முதல் 2004 மற்றும் 2018 முதல் 2019 வரையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். 

அரசியலில் தவிர்க்க முடியாத ஆளாக திகழ்ந்து வரும் மகிந்த ராஜபக்சே:

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, அதிபராக பதவி வகித்தபோதும், 2019 முதல் 2021 வரை பிரதமராக பதவி வகித்தபோதும் நிதித்துறையையும் அவரே கவனித்து வந்தார். அவர் அதிபராக பதவி  வகித்த காலத்தில்தான், விடுதலை புலிகளுக்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. தனது முதல் பதவிக்காலத்தில் நடந்த உள்நாட்டு போரில் விடுதலை புலிகளை தோற்கடித்தார். இதை தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றியை பதிவு செய்தார்.

ஊழல் செய்ததாகவும் போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் ராஜபக்சே மீது கடும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் ஆட்சியை பறி கொடுத்தார். இருப்பினும், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபராக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமராக பதவி ஏற்றார் மகிந்த ராஜபக்சே.

பழைமைவாத, பெளத்த பேரினவாதத்தை வைத்து அரசியல் செய்து வந்த ராஜபக்சேவுக்கு பேரிடியாக அமைந்தது இலங்கை பொருளாதார நெருக்கடி. வரியை குறைத்தது, விவசாயத்தில் ரசாயன உரங்கள் மீதான பயன்பாட்டுக்கு தடை விதித்தது போன்ற தவறான நடவடிக்கைகளால் இலங்கை பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

மீண்டும் கம்பேக்:

அதுமட்டும் இன்றி கொரோனா பெருந்தொற்று இலங்கை பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பிப்போட்டது. இலங்கை வரலாற்றில் அதுவரை நடந்திராத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இதனால், உச்சக்கட்ட கோபத்தில் இருந்த மக்கள், ராஜபக்சே அரசுக்கு எதிராக வரலாறு காணாத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் துடைத்து எறியப்பட்டனர். அதிபர் பதவியில் இருந்து விலகிய கோத்தபய, நாட்டை விட்டே தப்பி சென்றார். முதலில் மாலத்தீவிற்கும் பின்னர் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திற்கும் தப்பி ஓடினார்.

கடந்தாண்டு மே மாதம், மக்களின் போராட்டத்துக்கு மத்தியில் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே. ஜூன் மாதம், நிதித்துறை அமைச்சர் பதவியை பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதரவுடன் அவர்களின் பரம எதிரியாக கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே அதிபரானார்.

ஊழல் குற்றச்சாட்டு, போர் குற்றச்சாட்டு, இலங்கை பொருளாதார நெருக்கடி என பல சவால்களுக்கு மத்தியிலும் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சே. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மகிந்த ராஜபக்சே.

கொழும்புவில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கட்சி தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ளார் மகிந்த ராஜபக்சே. அப்போது பேசிய அவர், "முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக ராஜபக்சே குடும்பத்தினர் மீது நியாயமற்ற முறையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது" என்றார்.

வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், "மீண்டும் வலுவாக வருவோம். நம்மைப் பற்றி அவதூறு செய்பவர்கள், கேலி செய்பவர்கள் தங்கள் வழியைத் தொடரட்டும். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நாங்கள் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறோம். விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்ட போதிலும் தொடர்ந்து வளர்ச்சியை உறுதி செய்தோம்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget