Earthquake: அடுத்தடுத்து நடுநடுங்க வைக்கும் நிலநடுக்கம்! டோங்கோ நாட்டில் 7.4 அளவில் பதிவு.. சுனாமி ஆபத்தா?
ஹிஹிஃபோ என்பது டோங்காவின் முக்கிய தீவுக் கூட்டத்திற்கு வடக்கே உள்ள நியுடோபுடாபு தீவில் உள்ள முக்கிய கிராமமாகும்.
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவுக்கூட்டமான டோங்கா நாட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 212 கிமீ (132 மைல்) ஆழத்திலும், டோங்காவின் ஹிஹிஃபோவில் இருந்து வடமேற்கே 73 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஹிஃபோ என்பது டோங்காவின் முக்கிய தீவுக் கூட்டத்திற்கு வடக்கே உள்ள நியுடோபுடாபு தீவில் உள்ள முக்கிய கிராமமாகும்.
7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 20 முதல் 30 வினாடிகள் வரை நீடித்ததாக உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
7.4 என்ற ரிக்டர் அளவை தொடர்ந்து அதிகாலை 4.30 மணியளவில் 5.1 என்ற ரிக்டர் அளவில் மோவா மற்றும் வாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
கடந்த ஜனவரி 14ம் தேதி அன்றும் டோங்காவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கடந்த நவம்பரில், டோங்கா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 15.4 மைல் ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி நள்ளிரவில், பசிபிக் தீவுக்கூட்டத்தின் வடகிழக்கில் உள்ள நகரமான நியாஃபுவின் தென்கிழக்கில் இருந்து கிழக்கே சுமார் 128.6 மைல் தொலைவில் கடலில் ஏற்படுத்தியது.
ஜப்பானிலும் நிலநடுக்கம்:
Earthquake Detailed Report – 5/11
— NERV (@EN_NERV) May 10, 2023
At around 4:16am, an earthquake with a magnitude of 5.4 occurred in Southern Chiba Prefecture at a depth of 40km. The maximum intensity was 5+. There is no threat of a tsunami. #earthquake pic.twitter.com/7U5wBUx4xO
ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சிபாவில் உள்ள கிசராசு நகரில் வலுவாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கதால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.