மேலும் அறிய

China Covid Protest: 40 ஆயிரத்தை தொட்ட தினசரி கொரோனா..! உலகை மீண்டும் பயமுறுத்தும் சீனா..!

சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டியுள்ளதாலும், கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடி வருவதாலும் அந்த நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் சுனாமியை விட அச்சத்தை ஏற்படுத்திய ஒரு வார்த்தை கொரோனா. கொரோனா தொற்று காரணமாக இந்த ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் அவதிப்பட்டு வந்த உலகம் தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. முதன்முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது.

40 ஆயிரத்தை தொட்ட கொரோனா:

கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வந்த நிலையில், சீனாவிலும் இயல்பு வாழ்க்கை மீண்டு வந்தது. இந்த நிலையில், சமீப நாட்களாக சீனாவில் கொரோனா வைரசின் பாதிப்பு மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரசை காட்டிலும் அதன் காரணமாக பல நாடுகளும் விதித்த ஊரடங்கால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

 

சீனாவிலும் கொரோனாவை காட்டிலும் ஊரடங்கு காரணமாக மக்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் சீன மக்கள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சீனாவின் இன்றைய நிலவரப்படி தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 39 ஆயிரத்து 452 ஆக பதிவாகியுள்ளது. அதாவது, தினசரி 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வலுக்கும் போராட்டம்:

சீன அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஷாங்காயில் போலீசுக்கு எதிராக மக்கள் போராடி வந்த நிலையில், பிஜீங் நகரத்திலும் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குவாங்டங், செங்ஷோ, லாசா உள்ளிட்ட பல பகுதிகளிலும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதுடன், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர்.

மேலும், சீனாவின் வடகிழக்கில் உள்ள உரும்கி நகரில் ஒரு கட்டிடத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 10 பேர் பேர் உயிரிழந்ததற்கு கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே காரணம் என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், சீனாவின் அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர். தற்போது, சீனாவின் பெரு நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்தும், இந்த மோசமான சூழலுக்கு பொறுப்பேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

தினசரி 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களும் அதிபருக்கு எதிராக போராடி வருவதால் நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sea Food Export: வரியால் வாடும் ஏற்றுமதியாளர்கள்; தூத்துக்குடிக்கு திருப்பி அனுப்பப்பட்ட கடல் உணவு கண்டெய்னர்கள்
வரியால் வாடும் ஏற்றுமதியாளர்கள்; தூத்துக்குடிக்கு திருப்பி அனுப்பப்பட்ட கடல் உணவு கண்டெய்னர்கள்
Modi in Japan: “இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது முக்கியம்“: ஜப்பானிலிருந்து பிரதமர் மோடியின் மெசேஜ்
“இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது முக்கியம்“: ஜப்பானிலிருந்து பிரதமர் மோடியின் மெசேஜ்
Mukesh Ambani: முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஜியோ IPO குறித்து முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஜியோ IPO குறித்து முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு
டிரம்ப் முடிவால் தவிக்கும் திருப்பூர்!  ரூ.3000 கோடி வர்த்தக இழப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி ரியாக்‌ஷன்
டிரம்ப் முடிவால் தவிக்கும் திருப்பூர்! ரூ.3000 கோடி வர்த்தக இழப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி ரியாக்‌ஷன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி
Madhampatti Rangaraj :கர்ப்பமாக்கி கைவிட்ட ரங்கராஜ்!''ஜாய் க்ரிஷில்டா பகீர் புகார்
Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sea Food Export: வரியால் வாடும் ஏற்றுமதியாளர்கள்; தூத்துக்குடிக்கு திருப்பி அனுப்பப்பட்ட கடல் உணவு கண்டெய்னர்கள்
வரியால் வாடும் ஏற்றுமதியாளர்கள்; தூத்துக்குடிக்கு திருப்பி அனுப்பப்பட்ட கடல் உணவு கண்டெய்னர்கள்
Modi in Japan: “இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது முக்கியம்“: ஜப்பானிலிருந்து பிரதமர் மோடியின் மெசேஜ்
“இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது முக்கியம்“: ஜப்பானிலிருந்து பிரதமர் மோடியின் மெசேஜ்
Mukesh Ambani: முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஜியோ IPO குறித்து முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஜியோ IPO குறித்து முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு
டிரம்ப் முடிவால் தவிக்கும் திருப்பூர்!  ரூ.3000 கோடி வர்த்தக இழப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி ரியாக்‌ஷன்
டிரம்ப் முடிவால் தவிக்கும் திருப்பூர்! ரூ.3000 கோடி வர்த்தக இழப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி ரியாக்‌ஷன்
Sathguru: மூளை அறுவை சிகிச்சைக்கு பின் பைக்கில் கைலாய யாத்திரை; யோக விஞ்ஞானத்தின் சக்தி - சத்குரு
மூளை அறுவை சிகிச்சைக்கு பின் பைக்கில் கைலாய யாத்திரை; யோக விஞ்ஞானத்தின் சக்தி - சத்குரு
CBSE: சிபிஎஸ்இ 10, 12 பொதுத்தேர்வு: முக்கிய அறிவிப்பு! தவறுகள் தவிர்க்க, கடைசி தேதிக்குள் இதைச் செய்யுங்கள்!
CBSE: சிபிஎஸ்இ 10, 12 பொதுத்தேர்வு: முக்கிய அறிவிப்பு! தவறுகள் தவிர்க்க, கடைசி தேதிக்குள் இதைச் செய்யுங்கள்!
10th Original Mark Sheet: இன்னும் சில நாளில் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்- எங்கே, எப்படி பெறுவது?
10th Original Mark Sheet: இன்னும் சில நாளில் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்- எங்கே, எப்படி பெறுவது?
TN Govt: திமுக ஆட்சியில் குறையும் அரசுப்பள்ளி மாணவர்கள்; 2 மடங்கு அதிகமான தனியார் சேர்க்கை- புள்ளிவிவரங்களை புட்டுவைத்த அண்ணாமலை!
TN Govt: திமுக ஆட்சியில் குறையும் அரசுப்பள்ளி மாணவர்கள்; 2 மடங்கு அதிகமான தனியார் சேர்க்கை- புள்ளிவிவரங்களை புட்டுவைத்த அண்ணாமலை!
Embed widget