மேலும் அறிய

Maldives Row: இந்தியா உடன் சிக்கல் - ”நெறைய பேர அனுப்புங்க” - சீனாவிடம் கோரிக்கை வைக்கும் மாலத்தீவு அதிபர்

Maldives Row: இந்திய உடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிகப்படியான சுற்றுலா பயணிகளை அனுப்பும்படி சீன அரசுக்கு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Maldives Row: இந்திய உடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.

இந்தியா - மாலத்தீவு பிரச்னை:

பிரதமர் மோடி லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, இனி மாலத்தீவுகளுக்கு செல்லப்போவதில்லை என பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, ஏற்கனவே மாலத்தீவு பயணத்திற்காக செய்து இருந்த முன்பதிவுகளையும் ரத்து செய்து வருகின்றனர். இதனால் மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்கு மாலத்திவு  சுற்றுலா தொழிற்சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் இன்னும் தனிந்தபாடில்லை.  

சீனாவிடம் மாலத்தீவு அதிபர் கோரிக்கை:

இத்தகைய சூழலில் தான் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். புஜியான் மாகாணத்தில் மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் பேசிய முய்சு, சீனாவை மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடு என்று குறிப்பிட்டார். அந்த உரையில், “சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் வளர்ச்சி பங்காளிகளில் ஒன்றாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் தொடங்கப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி, மாலத்தீவு வரலாற்றில் காணப்பட்ட மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை வழங்கியுள்ளன. சீனா எங்கள் சந்தையில் கொரோனாவிற்கு முன்பு முந்தைய முதலிடத்தில் இருந்தது. அந்த நிலையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதற்காக மாலத்தீவிற்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முய்சு வலியுறுத்தியுள்ளார். இந்தியா உடனான உறவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்தியில், மாலத்தீவு அதிபர் சீனாவிடம் வைத்துள்ள இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா முதலிடம்:

மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் அந்நாட்டிற்கான மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் 209,198 இந்தியர்களும், 209,146 ரஷ்யர்களும்,  187,118 சீனர்களும் வருகை தந்துள்ளனர். 2022ஆம் ஆண்டிலும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருடன், மாலத்தீவிற்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதைதொடர்ந்து 198,000 சுற்றுலாப் பயணிகளுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தையும்,  177,000 வருகையுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், கொரோனாவிற்கு முந்தைய ஆண்டில் 2.80 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுடன் சீனா முதலிடத்தைப் பிடித்தது.  ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அதன் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மந்தநிலை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை புதுப்பிக்க போராடி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
Embed widget