மேலும் அறிய

14 ஆண்டுகளில் 4,512 சிகரெட்.. பணி நேரத்தில் ஊழியர் செய்த செயலுக்கு கடும் அபராதம் விதித்த ஜப்பான் நிறுவனம்!

பொது இடத்தில் புகைப்பிடிக்க தடை சில நாடுகளில் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

பொது இடத்தில் புகைப்பிடிக்க தடை சில நாடுகளில் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் ஒரு நாடு தான் ஜப்பான். ஜப்பானில் பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் சம்பளப் பணம் முழுவதையும் இழக்கும் அளவிற்குக் கூட அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அப்படி ஒரு சம்பவமும் நடந்துள்ளது.

ஜப்பானின் ஒசாகா மாகாணத்தைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரி ஒருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தின்போது சிகரெட் புகைத்ததற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், குறிப்பிட்ட அந்த நபர் அவருடைய பணிக்காலமான 14 ஆண்டுகளில் சுமார் 4500 முறை வேலை நேரத்தில் புகைப்பிடிக்கச் சென்றுள்ளார். நிதித் துறையில் முக்கிய வேலையில் இருந்த அவர் செய்தது குற்றம். அதன் காரணமாகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் இன்னும் 2 ஊழியர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களுடைய அடுத்த 6 மாத சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த அபராதம் விதிக்கப்படும் முன்னர் அவருக்கு பலமுறை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே வேலையாட்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த செய்கை பணி அர்ப்பணிப்பு மீறல் என்று கருதப்படுகிறது. குறிப்பிட்ட அந்த 61 வயது நபர் மட்டும் தனது 14 ஆண்டு பணிக்காலத்தில் 355 மணி நேரம் 19 நிமிடங்கள் புகைப்பிடிக்க செலவழித்துள்ளார் என்று தெரிகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஒசாகா மாகாணத்தில் அரசு அலுவலகங்கள் புகைப்பிடிக்க பூரண தடை கொண்டு வரப்பட்டது. 2019 முதல் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் புகைப்பிடிக்கவே கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

ஜப்பான் நாடு அதன் பணிக் கலாச்சாரத்திற்காக அறியப்பட்டது. அரசு அலுவலகங்களில் பணி முடிவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னால் சென்றால் கூட மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும். 

இதற்கு எடுத்தக்காட்டாக ஒரு சம்பவமும் இருக்கிறது. தி ஃபுனாபஷி சிட்டி போர்ட் ஆஃப் எஜுகேஷன் எனப்படும் கல்வி வாரியத்தில் 2019 மே மாதம் முதல் ஜனவரி 2021 வரை ஊழியர்கள் 300 முறை பணி நிறைவு நேரத்திற்கு முன்னதாக லாக் அவுட் செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தவறு செய்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 3 மாதங்களுக்கு 10ல் ஒரு பகுதி சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதில் ஒருவர் 59 வயது ஊழியர். அவர் மாலை 5.17 பேருந்தைப் பிடிக்க 5.15 மணிக்கே லாக் அவுட் செய்துவிட்டு சென்றுள்ளார்.

இத்தகைய கெடுபிடிகளைக் கொண்டது தான் ஜப்பானிய பணிக் கலாச்சாரம். இப்படி ஒரு ஆய்வெல்லாம் இந்தியாவில் செய்தால் என்னவாகும் என்று யூகித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். சில விநோதமான தண்டனைகளில் ஜப்பான் தண்டனையும் ஒன்றுதான்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா,  விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா, விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா,  விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா, விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி - 11 மணி வரை இன்று
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
3BHK படம் பார்த்த சச்சின் டெண்டுல்கர்...என்ன சொல்லியிருக்கார் தெரியுமா!
3BHK படம் பார்த்த சச்சின் டெண்டுல்கர்...என்ன சொல்லியிருக்கார் தெரியுமா!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.