மேலும் அறிய

தெலுங்கானாவில் சட்டமீறல், விதி மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் நடந்துள்ளது - ஆளுநர் தமிழிசை

என் மீது காரி துப்பினாலும் துடைத்துக்கொண்டு போய்விடுவோம் என்ற வசனம்போல செயல்படுகிறேன் -ஆளுநர் தமிழிசை

புதுவை கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தினவிழாவில் அரசு மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் வயது குழந்தை சாஹவ்வுக்கு நினைவாற்றல் திறமைக்காக விருது வழங்கப்பட்டது. கவர்னர் தமிழிசை விருதை வழங்கினார். குழந்தை சாஹவ் 31 விநாடிகளில் 7 உலக அதிசயங்களை கண்டறிந்து அதன் பெயரை சரியாக சொல்லி 359 பொருட்களின் பெயரை கண்டறிந்து சொல்லி உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த குழந்தையின் திறமையை பாராட்டி சான்றிதழ், ரொக்கப்பரிசும் அளிக்கப்பட்டது. பிராந்திய அளவில் மேல்நிலை பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அட்டவணை, பழங்குடியின மாணவர்கள் ரோகித், அபிநயா, விஜய், பிரியங்கா ஆகியோருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவுப்பரிசாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. புதுவை பகுதியில் சிறந்து விளங்கிய திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு பேராசிரியர் அம்பாடி நாராயணன் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

தெலுங்கானா குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் வானில் சுற்றிக்கொண்டிருந்தோம். தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 3 முறை 5 ஆயிரம் அடி தாண்டினால் தான் கிளியர். யாரையும் காக்க வைக்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை. 2 குழந்தைக்கு அம்மா. சிறு குழந்தைகள் இருப்பதை பற்றி எனக்கு தெரியும். எதிர்பாராத விதமாகவும் சில சம்பவங்கள் நடைபெறும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். புதுவை அலங்கார ஊர்திகள் அழகாக இருந்தன. சிறுதானிய ஊர்தி, போதைப்பழக்கத்தை கைவிட விழிப்புணர்வு வாகனங்கள் அழகாக இருந்தது. குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் மனநிறைவாக இருந்தது.  குடியரசு தினவிழாவை குறைத்து மதிப்பிட்டு தெலுங்கானா அரசு எந்த அறிவிப்பும் இல்லாமல், பொதுமக்கள் நலன் விரும்பி நீதிமன்றதிக்கு சென்றதால் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. நேரம் குறைவாக இருந்ததால் அரசு செய்ய முடியாததால், தேசியக்கொடிக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்துவிட்டு சிறப்பாக செயல்பட்ட 6 பேருக்கு விருது வழங்கிவிட்டு வந்தேன். தெலுங்கானாவில் சட்டமீறல், விதி மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் நடந்துள்ளது.

தெலுங்கானா மக்கள் என் மீது அதிக நேசம் வைத்துள்ளனர். ஒரு அரசு வேண்டுமென்றே விதிமீறல்களை செய்கிறது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என நினைத்து ஆளுநரை எதிர்க்கிறார். கவர்னர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என கூறுபவர்கள், முதலமைச்சர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என கேட்கட்டும். தெலுங்கானா அரசு நடந்துகொண்ட விதம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசுக்கு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். அதன்படி அறிக்கை அனுப்பியுள்ளோம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நேரடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் தூண்டுதலின் பேரில் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். அவர்கள் மீது பிளாக் மார்க் வந்துவிடக்கூடாது. மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்கக்கூடாது என நினைக்கிறேன். என் மீது காரி துப்பினாலும் துடைத்துக்கொண்டு போய்விவோம் என்ற வசனம்போல செயல்படுகிறேன்.

ஸ்மார்ட் மீட்டர் போன்ற அரசின் கொள்கை முடிவுகள் குறித்து முதலமைச்சர், அமைச்சர்களிடம் கேளுங்கள். நான் அரசுக்கு பாலமாக செயல்படுகிறேன். மக்கள் நலனுக்காக நான் சொல்வதை வேறுமாதிரி எடுத்துக்கொள்கிறீர்கள். இனி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சரிடம் கேளுங்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன், செயல்படுகிறேன்.  முன்பு இருந்த ஆளுநர்கள் மக்களுக்கான திட்டங்களுக்கு கூட தடை போட்டனர். நாங்கள் ரூ1000ம் வழங்கியுள்ளோம். எனவே யாருக்கு என்ன சந்தேகம் உண்டா அதை துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget