மேலும் அறிய
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Key Events

பிரேக்கிங் நியூஸ்
Source : Other
Background
- அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் என்பது அப்பட்டமான இந்தி திணிப்பு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
- நில அபகரிப்பு வழக்கில் அதிமுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
- மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சால் அனல் பறந்த விவாதம் - பிரதமர் மோடி உள்ளிட்டோரின் குறுக்கீட்டால் அவையில் பரபரப்பு
- குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் - பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார்
- ஜியோ, ஏர்டெல் கட்டண உயர்வுக்கு மத்தியில் சேவை கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்.,
- தஞ்சையில் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 5ம் தேதி வரை காவல் - பலத்த பாதுகப்புடன் புழல் சிறையில் அடைப்பு
- மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சிறை கைதியான இன்ஜினியர் ரஷித் எம்.பி., ஆக பதவியேற்க என்.ஐ. ஏ., அனுமதி
- புதிய குற்றவியல் சட்டத்தில் காவல்துறை விசாரணை காவலில் எடுப்பதற்கான நாட்கள் நீட்டிப்பா? - அமைச்சர் அமித் ஷா விளக்கம்
- ஹரியானா மாநிலம் குருகிராமில் நகை திருட்டை பார்த்த சிறுமி எரித்துக் கொலை - 10ம் வகுப்பு மாணவர் வெறிச்செயல்
- போரில் மாயமானதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் 38 பேரின் பட்டியல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
- மோசமான வானிலை சூழல் காரணமாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற, பார்படாஸ் நகரிலிருந்து வெளியேறிய முடியாமல் தவிக்கும் இந்திய அணி
21:10 PM (IST) • 02 Jul 2024
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!
சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி-ஆக உள்ள காவல்துறை இணை ஆணையர் ஜி. தர்மராஜன், புலனாய்வுத்துறை டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளராக உள்ள எஸ். அரவிந்த், திருச்சி காவல் தலைமைகத்தின் எஸ்.பி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.
21:04 PM (IST) • 02 Jul 2024
Breaking News LIVE: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் துயரம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















