![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Villupuram: இறப்பு சான்று வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது
கெடார் அருகே இறப்பு சான்று வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது
![Villupuram: இறப்பு சான்று வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது Villupuram VAO arrests woman who took bribe of Rs.1000 to provide death certificate TNN Villupuram: இறப்பு சான்று வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/25/aaa20b3bd144c5470114516c946433041690272075974113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை ஊராட்சிக்குட்பட்ட டட் நகரை சேர்ந்தவர் அருளாந்து மனைவி அன்னம்மாள் (70). இவருடைய கணவர் அருளாந்தின் தந்தை மாணிக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பும், அருளாந்தின் அண்ணன் சவரிமுத்து 25 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்து விட்டனர். அப்போது அவர்களது இறப்பினை பதிவு செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் அன்னம்மாள் விட்டுவிட்டார். தற்போது பூர்வீக சொத்து தொடர்பாக அவர்கள் இருவரின் இறப்பு சான்றிதழும் தேவைப்பட்டதால் அன்னம்மாள், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் விழுப்புரத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவி சங்கீதா (48) என்பவரை சந்தித்தார்.
அதற்கு மாணிக்கம், சவரிமுத்து ஆகியோரின் இறப்பு விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்து வழங்குவதற்காக ஒவ்வொரு மனுவுக்கும் ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என அன்னம்மாளிடம் சங்கீதா கூறியதாக தெரிகிறது. அன்னம்மாள் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், எப்படியாவது இறப்பு சான்றிதழ் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்து இறப்பு சான்றிதழ் தர முடியும் என கூறிய சங்கீதா, அந்த பணத்தை, தான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்கும் படியும் கூறினார்.
லஞ்சம் கொடுக்க பணம் இல்லாத அன்னம்மாள், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை அன்னம்மாளிடம் கொடுத்து அதை சங்கீதாவிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை அன்னம்மாள் எடுத்துக்கொண்டு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சங்கீதாவிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சங்கீதாவை கையும், களவுமாக பிடித்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)