மேலும் அறிய

விழுப்புரம்: போலி மருத்துவர் சிகிச்சை அளித்த சிறுமி கவலைக்கிடம்; உறவினர்கள் சாலை மறியல்

விழுப்புரம்: கிளியனூரில் சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுமியின் உறவினர்கள் திடீர் சாலை மறியல்

விழுப்புரம்: கிளியனூரில் சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  சிறுமியின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். ஆட்டோ ஓட்டுனரான இவரது மகள் சஞ்சனா (5) தைலாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் ஈச்சங்காட்டைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்பு சஞ்சனாவின் உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் மாறி உள்ளது. கணேசன் வெளியில் தான் டாக்டர் என்று கூறி மருத்துவம் பார்த்து வருவதாகவும் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனாவின் பெற்றோர் சஞ்சனாவிற்கு தைலாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சஞ்சனா தற்பொழுது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சஞ்சனாவின் தந்தை சுகுமார் கிளியனூர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தனது மகள் உயிருக்கு போராடி வருவதாகவும், எனவே தவறான சிகிச்சை அளித்த கணேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கிளியனூர் போலீசார் தவறான சிகிச்சை அளித்த கணேசன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைதொடர்ந்து தவறான சிகிச்சை அளித்த கணேசன் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதேபோன்று கணேசன் மீது சுகாதாரத் துறை மூலமாக துறை ரீதியான உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று சஞ்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திண்டிவனம்- புதுவை சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திண்டிவனம்- புதுவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த கிளியனூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமி கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை

பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget