மேலும் அறிய

விழுப்புரம்: ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே கோரையாற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் உடைந்தது

ஏனாதிமங்கலம், மாரங்கியூர் இடையே கோரையாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது மாரங்கியூர், பையூர், கொங்காரயநல்லூர், சேத்தூர். இந்த 4 கிராமங்களின் இருபுறமும் தென்பெண்ணையாறு, கோரையாறு செல்கிறது. தனித்தீவு போல் உள்ள இந்த 4 கிராம மக்களும் விழுப்புரம் நகருக்கு சென்று வர ஏனாதிமங்கலம்  மாரங்கியூர் இடையே உள்ள கோரையாற்று தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். 1898 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பிறகு அப்பகுதி கிராம மக்கள் தற்காலிகமாக சிமெண்டு குழாய்கள் வைத்து தரைப்பாலத்தை சீரமைத்து, போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர்.


விழுப்புரம்: ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே கோரையாற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் உடைந்தது

இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் கோரையாற்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலம் உடைந்து சேதமடைந்து போனது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சேதமடைந்த தரைப்பாலம் வழியாக ஆபத்துடன் பயணம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விழுப்புரம் நகருக்கு செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் திருவெண்ணெய்நல்லூர் வழியாக 46 கிலோ மீட்டர் தூரம் சுற்றி விழுப்புரத்துக்கு சென்று வருகிறார்கள். விளை பொருட்களை ஏற்றிச் செல்வதிலும் பெரும் சிரமம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே உடைந்து சேதமடைந்த கோரையாறு தரைப்பாலம் அமைந்துள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


விழுப்புரம்: ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே கோரையாற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் உடைந்தது

மேலும், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 09.11.2021 வரை 362.94 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 248.3 மி.மீட்டரை விட 46 சதவீதம் கூடுதல் ஆகும்.

குறிப்பாக செங்கல்பட்டு, கன்னியாகுமரி, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 16 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Embed widget