மேலும் அறிய

விழுப்புரம்: செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு ; டவர் மீது ஏறி இளைஞர்கள் திடீர் போராட்டம்

விழுப்புரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டவர் மீது ஏறி இளைஞர்கள் திடீர் போராட்டம்.

விழுப்புரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100 அடி உயர டவர் மீது ஏறி இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் அடுத்த காணை அருகே உள்ளது காங்கேயனூர் கிராமம். இந்த கிராமத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கும் பணியை கடந்த 6 மாதத்துக்கு முன்பு தொடங்கியது. ஆனால், கிராமத்தின் மைய பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால், கதிர்வீச்சு உள்ளிட்ட பிரச்னைகள் எழும் என்பதால், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்தனர். மேலும், காங்கேயனூர் ஊராட்சியில் கடந்த ஏப்ரல் 8-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தின் போதும், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, செல்போன் கோபுரத்தை தனியார் நிறுவனம் அமைத்தது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ள நேற்று, பணியாளர்கள் அங்கு வந்தனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுமார் 100 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அப்போது செல்போன் கோபுரம் செயல்பட அனுமதிக்க கூடாது, உடனடியாக அதை அகற்ற வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், காணை காவல் ஆய்வாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாலுகா அலுவலகத்தில் இன்று சமாதானம் கூட்டம் நடத்தி தீர்வு காணலாம். எனவே போராட்டத்தை கைவிட்டு, செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறி, கீழே இறங்கி வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget