மேலும் அறிய

விழுப்புரத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

விழுப்புரத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

விழுப்புரம் மருத்துவமனை வீதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் பழனி அவர்கள் இன்று (08.02.2023) துவக்கி வைத்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனை காத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் மற்றவரின் துணையின்றி சுயமாக செயல்படும் பொருட்டு, அதிநவீன உபரகணங்களை வழங்கி மாற்றுத்திறனாளிகளை காத்து வருகிறார்கள். மேலும், மாவட்ட அளவில் அவ்வப்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு முகாம் நடத்தி மாற்றுத்திறன் கொண்டவர்களை கண்டறியவும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 18 வயதிற்குட்பட்ட 4682 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்காக விழுப்புரம் நகராட்சி மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 08.02.2023 முதல் 02.03.2023 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. தொடக்க நாளான 08.02.2023 இன்று நகராட்சி உயர்நிலைப்பள்ளயிலும், 09.02.2023 அன்று வானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 10.02.2023 அன்று திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 14.02.2023 அன்று முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 15.02.2023 அன்று மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டேரிப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 16.02.2023 அன்று செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 17.02.2023 அன்று மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 21.02.2023 அன்று காணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும்,

22.02.2023 அன்று விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23.02.2023 அன்று ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முருங்கம்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 24.02.2023 அன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 28.02.2023 அன்று கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 01.03.2023 அன்று கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 02.03.2023 அன்று வல்லம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு மருத்துவ முகாமில், தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களை தேர்வு செய்திடுவதற்கு எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் Opthal Technician ஆகியோர்கள் கலந்துகொண்டு 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

இச்சிறப்பு மருத்துவமுகாமில், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், அட்டைக்கான பதிவுகள் மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்க் தேர்வு செய்தல், அறுவை சிகிச்சை மாணவர்களை கண்டறிதல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை பெற்று தருதல், இலவச பேருந்துஃஇரயில் பயண அட்டை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி குழந்தையினை கொண்ட பெற்றோர்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி பெறுமாறு மாவட்ட ஆட்சியர்  பழனி அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தலா ரூ.9,475ஃ- வீதம் 6 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.56,850 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியும், தலா ரூ.1,950%- வீதம் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.3,900%- மதிப்பீட்டில் நடை பழகு உபரகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரே ஒரு மெசேஜ்.. ஓஹோன்னு வாழ்க்கை.. நம்பி ஏமாந்த லாஸ்பேட்டை பெண்! ரூ.21 லட்சம் மோசடி...
ஒரே ஒரு மெசேஜ்.. ஓஹோன்னு வாழ்க்கை.. நம்பி ஏமாந்த லாஸ்பேட்டை பெண்! ரூ.21 லட்சம் மோசடி...
கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
"காவல்துறையை ஏவி விடுகிறதா அரசு?" - முதல்வர் இலாகா மீது கே. பாலகிருஷ்ணன் கடும் தாக்கு!
புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Embed widget