மேலும் அறிய

ட்ரோனை பார்த்ததும் தெறித்து ஓடிய மது பிரியர்கள்; விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் : காட்டு பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு... தெறித்து ஓடிய மதுகுடிப்போர்

விழுப்புரம்: திண்டிவனம் மற்றும் கோட்டகுப்பம் காவல் நிலைய உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சம்பவங்களை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்ததில் மது அருந்தியவர்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும், சாராயம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சசாங்சாய் பொறுப்பேற்ற பிறகு குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி, காட்டுப்பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவிட்டார். இதையடுத்து திண்டிவனம் அருகேயுள்ள, ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி, கோட்டகுப்பம், மற்றும் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  காட்டுப் பகுதிகளில் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடைபெற்றது.

திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மற்றும் கோட்டகுப்பம் பகுதியில் கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் ஆகியோர் மேற்பார்வையில் கண்காணிப்பு பணி நடைபெற்றது. அதே சமயத்தில் காட்டுப்பகுதிக்குள் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்தியவர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள், ட்ரோன் கேமராவை கண்டவுடன் அலறியடித்து ஓடி முயன்றவர்களை மடக்கி பிடித்த போலீசார், பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தக்கூடாதெனவும், சூதாட்டம் விளையாடக்கூடாது என்றும் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.

மேலும், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் திண்டிவனம் ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ட்ரோன் கேமராவை கண்டு ஓட முயன்ற ஒரு நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஆட்சிபாக்கம் பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்ததும் போலீசார் ட்ரோன்  கேமராவுடன் வந்ததை கண்டு கூடியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அவர் ஆட்சி பக்கம் பகுதியை சேர்ந்த ஜெய் கிருஷ்ணன் என்பதும் இந்த பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனை ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget