மேலும் அறிய

Villupuram: பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபரீதம் - தீப்பற்றி எரிந்த கூரை

தேவனூர் கிராமத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த கூரை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

தீப்பற்றி எரிந்த கூரை

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே தேவனூர் கிராமத்தில் பட்டாசு வெடித்ததில் பக்கத்து வீட்டு மாடியில் இருந்த கூரை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (நவம்பர் 12) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் இப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பட்டாசுகள் இல்லாத தீபாவளி பண்டிகை ஏது என்பது போல அதிகாலை முதல் இரவு வரை விதவிதமாக பட்டாசுகளை வெடிக்க விட்டு இந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில்  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் (வயது 68), இவர் தவிடு வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டு பக்கத்தில் தீபாவளி காரணமாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது ராமு என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் இருந்த கூரையில் எதிர்பாராத விதமாக தீப்பொறிப்பட்டுள்ளது. தீப்பொறி பட்டதன் காரணமாக பற்றி எரிய தொடங்கிய கூறையானது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

சாம்பலாகிய தீப்பற்றி எரிந்த கூரை

இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர், இருப்பினும் அணைக்க முடியாததால் திருக்கோவிலூர் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இருப்பினும் தீயை அணைக்கும் முன்பாகவே ராமு என்பவரின் வீட்டில் மொட்டை மாடியில் இருந்து கூரையானது முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. மேலும் இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தீ விபத்து குறைவு - போலீசாருக்கு குவியும் வாழ்த்து 

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை போது தீ விபத்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் , இந்த ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து எடுத்த நடவடிக்கையால் விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும் தீயணைப்பு வீரர்களின் அவ்வப்போது நடத்தப்படும் விழிப்புணர்வு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தீ விபத்து குறைந்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget