மேலும் அறிய

Villupuram: மேல்பாதி கோயில் விவகாரம்: இருதரப்பினர் இடையே கோட்டாட்சியர் 2ம் கட்ட விசாரணை

Villupuram: மேல்பாதி கோயில் விவகாரம்: இருதரப்பினர் இடையே கோட்டாட்சியர் தலைமையில் இரண்டாம் கட்ட விசாரணை...

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் :

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட விசாரணையில், கோயில் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், தங்கள் தரப்பு ஆட்சேபனையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை:

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் செல்வது தொடர்பாக, இருசமூக மக்களிடையே மோதல் நிலவி வந்தது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி, 145 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி, வருவாய்த் துறையினர் கடந்த மாதம் 7ஆம் தேதி சீல் வைத்தனர். கோயில் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என, இருசமூக மக்களும் பரஸ்பரம் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், கடந்த மாதம் 9ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில், எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

ஆட்சேபனையை தாக்கல் செய்ய கால அவகாசம்:

இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 2ஆம் கட்ட விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சம்மன் அனுப்பப்பட்ட, ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் தரப்பைச் சேர்ந்த  5 பேர் நேரில் ஆஜராகினர்.  அப்போது, அவர்கள் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளோம். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. எனவே, அதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில், எங்கள் தரப்பு ஆட்சேபனையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி, கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் சந்திரபாலன் கூறியதாவது:-

திரௌபதி அம்மன் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக கோட்டாட்சியர் சம்மன் அனுப்பி இருந்தார். இதையடுத்து நாங்கள் விசாரணைக்கு நேரில் ஆஜரானோம். மேல்பாதி கிராமத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம் என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம். இரு சமூக மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரசு எடுக்கும்  நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget