மேலும் அறிய

விழுப்புரம்: குழந்தைக்கு உணவுக்குழாய் பாதிப்பு; கண்ணீர் மல்க உதவி கேட்கும் பெற்றோர் - அரசு செவி சாய்க்குமா..?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உணவுக்குழாய் பிரச்னையால் குழந்தை பாதிப்பு காரணமாக குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிக்கரம் கேட்கும் பெற்றோர்.

விழுப்புரம் அடுத்த செஞ்சியை சேர்ந்த பூபாலன் - பூங்கொடி தம்பதியரின் 22 மாத குழந்தையான ரேணுகா  உணவுக்குழல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை மேற்கொள்வதற்கு ரேணுகாவின் உடல் எடை சரியான அளவில் இல்லாததால்,  சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை மேலும் உடல் எடையைக் கூட்டுவதற்கு ரேணுகாவுக்கு உதவுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள இளங்கோவன் தெரு, பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன்( 46), பூங்கொடி (35) தம்பதியினர். இவர்களுக்கு ரேணுகா என்ற ஒன்றரை வயது  பெண் குழந்தை (22 மாதம் ) உள்ளது. பூபாலன் 32 வருடங்களாக சைக்கிளில் தேநீர் விற்று வருகிறார் . தேநீர் விற்று வரும் வருமானத்தைக் கொண்டு குடும்ப சூழ்நிலையை  கவனித்து வந்துள்ளார்.

ரேணுகா பிறந்த மூன்றாவது நாளிலேயே உணவுக்குழாய் பிரச்னையால் பாதிப்படைந்துள்ளார். இக்குழந்தை உணவு உட்கொள்ள முடியாமலும், சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டு சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதலில் கழுத்தில் ஒரு சிறிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வயிற்று பகுதியில் இரண்டு இன்ச் அளவில் ஒரு துளை போட்டு டியூப் வழியாக  உணவு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



விழுப்புரம்: குழந்தைக்கு உணவுக்குழாய் பாதிப்பு;  கண்ணீர் மல்க உதவி கேட்கும் பெற்றோர் - அரசு செவி சாய்க்குமா..?

மேலும் இந்த உணவு குழல் பிரச்னையால் ரேணுகாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, சரியான உடல் எடை இல்லாததால் மருத்துவர்கள், ரேணுகாவின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். தற்போது ரேணுகாவின் உடல் எடை 9.300 கிலோ தான் உள்ளது. இந்த உடல் எடை கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்வது குழந்தையின் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல் எடை 16 கிலோவிற்கு இருந்தால் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் இல்லை என்றால்,  குழந்தையின் நிலை கேள்விக்குறி என தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட பூபாலன், பூங்கொடி என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தனர். மேலும் இதுகுறித்து ரேணுகாவின் தந்தை பூபாலன் கூறுகையில்,  ரேணுகாவிற்கு காலையில் பால் பழச்சாறு, போன்றவற்றை ட்யூப் வழியாக கொடுத்து முடிந்த அளவிற்கு உடல் எடையை கூடுவதற்கான வழியை செய்து வருகிறோம். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். ரேணுகாவிற்கு ஒரு மாத உணவிற்காக 30,000  ஆயிரம் ரூபாய் செலவாகிறது, அது மட்டுமல்லாமல் மருத்துவ செலவிற்கு ஸ்கேன் போன்றவற்றிற்கு அதிக செலவு கூடுகிறது.


விழுப்புரம்: குழந்தைக்கு உணவுக்குழாய் பாதிப்பு;  கண்ணீர் மல்க உதவி கேட்கும் பெற்றோர் - அரசு செவி சாய்க்குமா..?

நான் டீ விற்று வரும் வருமானத்தை குழந்தையின் உணவிற்கும் வீட்டு செலவிற்கு பார்த்து வருகிறேன். மேலும் தமிழக அரசாங்கம், உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்கள்  குழந்தையின் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முடிந்த அளவிற்கு பண உதவி அல்லது உடல் எடையை கூட்டுவதற்கான உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தால், மிகவும் உதவியாக இருக்கும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

உதவும் நோக்கம் கொண்ட மனிதநேயம் உள்ள பொதுமக்கள் இன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தங்களால் முடிந்த பண உதவியை செய்யுமாறு இக்குழந்தையின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர். G-PAY : 9578611786, A/C no :273601000018249, GINGEE BRANCH, IFSC : IOBA0002736, INDIAN OVERSEAS BANK.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget