மேலும் அறிய

ஜெயலலிதா படத்திற்கு செருப்பு மாலை போட்டவர் தான் ஓபிஎஸ் - சி.வி.சண்முகம்

தனக்கு முதல்வர் பதவி இல்லை என்பதற்காக, உன்னை முதல்வராக்கிய சசிகலா மீது ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக கொலை வழக்கு சுமத்தியவர் தான் ஓ.பி.எஸ்

ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு நடிப்பதாகவும், முதலமைச்சர் பதவி இல்லை என்றபோது சசிகலா மீது கொலை பழி போட்டவர்தான் பன்னீர் செல்வம் என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தொடங்கப்பட்டு 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு  மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேசியதாவது: திமுக இயக்கம் என்ற தீய சக்தியை விரட்டி அடிக்கபட வேண்டுமென்று தொடங்கப்பட்ட இயக்கமாக அதிமுக தற்போது 51 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது இதில் 32 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தில் ஆட்சி புரிந்த இயக்கமாக இருந்துள்ளது.

இன்றைக்கு யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நான் தான் தலைவர் என கூறிக்கொள்ளலாம் சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கலாம் அப்படி கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் சாதிக்க முடியவில்லை. நடிகர்களுக்கு ரசிகர் உண்டு அவர்களை மக்கள் தலைவராக ஏற்று கொள்ளமாட்டார்கள். அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுகொள்ளப்பட்ட தலைவர் தான் எம்ஜி ராமச்சந்திரன் எந்த அளவிற்கு சாதனைகளை அதிமுக பார்த்திருந்தாலும் சோதனைகளையும் பார்த்த இயக்கமாகயுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் தன் சொந்த கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாத தலைவராக உள்ளதால் தான் கருணாநிதி இறப்பு வரை ஸ்டாலினை ஏன் தலைவராக்கவில்லை என்பது புரிகிறதா என கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி சுய நினைவு இழந்த பிறகு தான் ஸ்டாலினுக்கு பதவி வழங்கபட்டுள்ளதாகவும், தன்னை கைது செய்துவிட்டு தான் தூங்குவார் என கூறும் விழுப்புரத்தில் உள்ள காவல் துறை அதிகாரி அப்படியென்றால் தாளாரமாக தன்னை கைது செய்து கொள்ளுங்கள் அப்படியாவது அந்த அதிகாரி நிம்மதியா தூங்கட்டும் என சிவி சண்முகம் தெரிவித்தார்.  எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என கூறியவர்கள் மத்தியில் நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் முதல்வர் என பெயர் பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி கொரனாவை சிறப்பாக கையாண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி என மத்திய அரசு அறிவித்தத நிலையில் ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் தான் ஆகிறது ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விலையேற்றம் அதிகரித்து காய்கறி முதல் கட்டுமான பொருட்கள் வரை விலைவாசி அதிகரித்துள்ளதாக கூறினார்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிமெண்ட் விலை அதிகரிக்கும் ஏனென்றால் கருணாநிதியின் குடும்பத்தாரின் பினாமிகள் கையில் சிமெண்ட் கம்பெணிகள் உள்ளதால் தான் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என தெரிவித்தார். ஆளத்தெரியாத முதல்வரக தமிழக முதல்வர் உள்ளதால் செயல்படாத தமிழக அரசாக  உள்ளதால் மருந்துகள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் காய்ச்சலுக்கு வழங்குகிற மாத்திரைகள் கூட இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளதாக கூறினார். சுகாதார துறையை கவனிக்காமல் எப்பொழுதும் தன் உடம்பை காக்க மாரத்தான் ஓடிகிற சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணி உள்ளதாகவும் மருந்து கொள்முதல் செய்கின்ற டெண்டரை முடிவு செய்யாததால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையே தமிழக அரசு கலைக்கபார்ப்பதாக குற்றச்சாட்டினார்.

தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளார்கள் டம்பி முதல்வராக ஸ்டாலினும், சினிமா துறையில் முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், அனைத்து வளங்களையும் கொள்ளையடிக்கிற முதல்வராக மருமகன் சபரீசனும் மூவரை கட்டுபடுத்துகிற முதல்வராக ஸ்டாலினின் துணைவியார் உள்ளதாக தெரிவித்தார். மேலும் டம்மி முதல்வரை மூன்று ஐ ஏ எஸ் அதிகாரிகள் கட்டுபடுத்துவதாகவும் இந்து மதத்தினை பற்றி தவறான பேசினால் இந்து சமயநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு காது கேட்காது என்று தெரிவித்தார். மருந்து மாத்திரை வாங்கி தர இயலாத முதல்வராக ஸ்டாலின் உள்ளதாகவும் தமிழக மக்கள் ஏன் டா திமுகவிற்கு வாக்களித்தோம் என்று வேதனை பட்டு கொண்டிருப்பதாகவும், குறுகிய காலத்தில் மக்கள் வெறுப்பினை பெற்றவராக ஸ்டாலின் உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மின்சார கட்டனம் சொத்து வரியை உயர்த்தாதே என கூறிவிட்டு இன்று திமுக தலைவர் ஸ்டாலின் பொறுபேற்றவுடன் மின்சாரம்,சொத்து வரி கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும் நவீன முறையில் கொள்ளை அடிப்பதில் திமுகவினரை விட வேறு யாராலும் முடியாது என்றும் திமுக தொண்டர்களே இந்த ஆட்சி எதுக்குடா என்று கேள்வி நிலைமை உருவாகி உள்ளதாக கூறினார்.

பஞ்சாயத்தில் உள்ள பணத்தை அனைத்தையும் திமுக எடுத்துகொண்டு கமிஷன் பேசி விற்றுவிட்டார்கள். ஊரக உள்ளாட்சி குழு அமைப்பிற்கு 2 ஜி புகழ் கனிமொழி தலைவராக உள்ளது  திருடன் கையில் சாவியை கொடுத்தது போல் இருப்பதாகவும், டெல்லியில் மறைமுக கள்ள உறவை வைத்துகொண்டு பதவியை கனிமொழிக்கு வாங்கி கொடுத்தது தான் திமுக அரசு குற்றஞ்சாட்டினார். முதல் கையெழுத்தாக நீட்டை ரத்து செய்வேன் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்று 16 மாதகாலம் ஆகியும் செய்யவில்லை நீட் தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை விசாரனைக்கு வந்தபோது அந்த வழக்கினை தற்போது விசாரனை செய்ய வேண்டாம் தமிழக முதல்வர் கையெழுத்து கடிதம் வழங்கியதால் வழக்கு விசாரனை ஜனவரிக்கு தள்ளி போய் உள்ளதாகவும் அதிமுக சின்னம்முடக்கப்பட்டு மீண்டும் மீண்டெழுத்த இயக்கமாக அதிமுக உள்ள நிலையில் தமிழகத்தில் 234 தொகுதியிலும் கூட்டத்தை நடத்தியுள்ளோம் தொண்டர்கள் படை இருந்தால் ஒரு கூட்டத்தை நடத்தி காட்ட முடியுமா என ஓ. பன்னீர் செல்வத்து சிவி சண்முகம் சவால் விடுத்தார்.

ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் தான் ஓ. பன்னீர்செல்வம் இன்றைக்கு நடிக்கிறார். முதலமைச்சர் பதவி இல்லை என்றபோது சசிகலா மீது கொலை பழி போட்டவர்தான் ஓ. பன்னீர் செல்வம் சசிகலா குடும்பம் கழகத்தில் இணைய கூடாது என்றவர் தான் ஓ பி எஸ். அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர் தான் ஓ பி எஸ் துரோகம் இழைத்தவர்கள் நல்லா இருந்தததாக  சரித்திரம் இல்லை. ஆளத்தெரியாத தகுதியற்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாக கூறினார்.

திமுக கட்சியிலேயே டம்பி பீசாக பொன்முடி உள்ளதாகவும் மூத்த நிர்வாகிகளுக்கு திமுகவில் மரியாதை இல்லை என்றும் கொள்ளை அடித்து கொடுப்பவர்கள்,கமிஷன் கொடுப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது. விடிவு காலம் விரைவில் வர உள்ளது.. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் வர்க்கூடும் என்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறியது போல் எப்போது தனது பதவி பறிபோகும் என்ற பயத்துடன் ஸ்டாலின் உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget