மேலும் அறிய

செஞ்சியில் கோவில் இடப் பிரச்சனையால் இரு பிரிவினரிடையே மோதல் - போலீஸ் குவிப்பு

இந்த பிரச்சினை கடந்த 6 மாதங்களாக நீடித்துவரும் நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணர் கோவில் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கோவில் பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். செஞ்சியை அடுத்த மேல்அத்திப்பாக்கத்தில் மாரியம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில் அருகருகே அமைந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணர் கோவில் முன்பு தகரத்தால் மேற்கூரை போடுவதற்கு அந்த கோவிலை வழிபடும் ஒரு சமூகத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்கு மாரியம்மன் கோவிலை சேர்ந்த ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில், அங்கு மேற்கூரை அமைத்தால் தங்களது கோவிலில் பொங்கல் வைத்துவழிபாடு செய்யும் போதும், கோவிலை சுற்றி வருவதற்கும் போதிய இடம் வசதி இல்லாமல் போய்விடும் எனவே கிருஷ்ணர் கோவில் முன்பு மேற்கூரை அமைக்கக் கூடாது என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை கடந்த 6 மாதங்களாக நீடித்துவரும் நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணர் கோவில் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். அதில், மேற்கூரை அமைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. கோர்ட்டு உத்தரவின் பேரில், நேற்று கிருஷ்ணர் கோவில் முன்பு தகரத்தால் கூரை அமைக்க அவர்கள் முற்பட்டனர். இதற்கு மாரியம்மன் கோவிலை வழிபடுபவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதனால், இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் செஞ்சி பிரியதர்ஷினி, விழுப்புரம் பார்த்திபன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும், செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா தலைமையில் வருவாய் துறையினரும் அங்கு வந்தனர். தொடர்ந்து, இருபிரிவினரிடையே அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து மாரியம்மன் கோவிலை வழிபட்டு வருபவர்கள் தரப்பில் பெண்கள் மட்டும் கோவில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பெண் போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்களிடம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய அனுமதியின் பெயரில் தான் தற்போது இங்கு அவர்கள் மேற்கூரை அமைத்து வருகிறார்கள், எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் பின்னர் அவர்கள் கிருஷ்ணர் கோவில் முன்பு மேற்கூரையை அமைத்தனர். தொடர்ந்து அங்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget