மேலும் அறிய

ஆட்சியர் அலுவலகத்தில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி... தொழிலாளர்களை ஏமாற்றியதாக ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மீது புகார்

ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் நிலத்தில் கிணறு வெட்டியதற்கான தொகையை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை. 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

விழுப்புரம்: ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் நிலத்தில் கிணறு வெட்டியதற்கான தொகையை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கிணறு ஆழப்படுத்தும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களை கடந்த சில வாரத்திற்கு முன்பு, விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சொக்கநாதன் என்பவர் தொடர்புகொண்டு மேலக்கொந்தை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டுவதற்கு பணி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கிணறு வெட்டுவதற்கு ஒரு கனஅடிக்கு ரூ.40 என்று பேசியுள்ளார். அதற்கு அந்த தொழிலாளர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி கடந்த 20-ந் தேதி முதல் அவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 50 தொழிலாளர்கள், கிணறு வெட்டும் பணியை தொடங்கினர்.

ஒரு வார காலத்தில் பணியை முடித்த நிலையில், 91,532 கனஅடிக்குரிய தொகையை கூலியாக தரும்படி அந்த தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், தர மறுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து 27-ந் தேதியன்று விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பிறகு அந்த கிணறை பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்து அதன் அறிக்கையை காவல்துறையிடம் கொடுத்துள்ளனர். இருப்பினும் அந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய கூலித்தொகையை கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு தர வேண்டிய தொகையை விரைந்து பெற்றுத்தருமாறு அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் அவர்களில் பாபு மனைவி புஷ்பாஞ்சலி (வயது 35), மாரி மனைவி லட்சுமி (55) உள்ளிட்ட 6 பேர் தங்கள் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்கள் மீது முன்னெச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றினர். அதன் பிறகு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டியதற்கான உரிய தொகையை தரும்படி கேட்டதற்கு அவர் தர மறுத்து ஆணவத்தோடும், அதிகாரத்துடனும் பேசுகிறார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரம், அரசியல் துஷ்பிரயோகம் செய்து அவர் விசாரணையை தாமதப்படுத்துகிறார். இதனால் நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் உணவுக்கே வழியின்றி மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே எங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத்தர உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். இதை கேட்டறிந்த போலீசார், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Saibaba statues removed : Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Air Force Show Chennai: விமானப்படை சாகச நிகழ்ச்சி.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமிழக வீரர்கள்
விமானப்படை சாகச நிகழ்ச்சி.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமிழக வீரர்கள்
எந்த நோய் பாதிப்பு வந்தாலும் தடுக்கும் ஆற்றல் சுகாதாரத்துறைக்கு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
எந்த நோய் பாதிப்பு வந்தாலும் தடுக்கும் ஆற்றல் சுகாதாரத்துறைக்கு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Embed widget