மேலும் அறிய

டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?

தமிழகத்தின் சாலை அமைப்பில் பெரும் முதலீடாகவும், டெல்டா பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய சாலையாக அமைந்துள்ளது.

விக்கிரவாண்டி – கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை 

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையின் தஞ்சாவூர்-கும்பகோணம் - சோழபுரம் பகுதி பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதால் இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால தாமதமாகி வந்த நிலையில் விக்கிரவாண்டி – கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை தற்போது திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது. இதன் மூலம் டெல்டா மாவட்ட பயணிகள் பயனடைவார்கள். மேலும் பயண நேரம் மீதம் ஆகும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI  ஜனவரி 20 முதல் சுங்கச்சாவடி வசூல் செய்வதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டதால், அடுத்த வாரம் முதல் இந்தப் பகுதி அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறக்கப்படும். கடந்த சில மாதங்களாக, ஒரு சில பகுதிகளில் சில பணிகள் இன்னும் நடைபெற்று வந்தாலும், பல வாகன ஓட்டிகள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Republic Day 2025 Wishes: குடியரசு தினத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்துங்கள்! வாழ்த்துகள் லிஸ்ட் இங்கே...!

95% பணிகள் நிறைவு

இந்த திட்டம் முன்பு செப்டம்பர் 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் புயல், கொரோனா தொற்று மற்றும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுத் திட்டமும் மந்தமானது. நிலம் கையகப்படுத்தும் பணியில் தஞ்சாவூர் முதல் சோழபுரம் மற்றும் சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான இரண்டு தொகுப்புகளில் 95% பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்ற தொகுப்பின் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு புதிய டெண்டருக்கு செல்ல NHAI முடிவு செய்திருந்தது.

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் டெல்டா பகுதிக்கு, குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாடாக பரவலாகக் கருதப்படுகிறது. தஞ்சாவூர் முதல் சோழபுரம் வரை; சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரை; மற்றும் விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை என இந்தத் திட்டம் மூன்று தொகுப்புகளாக செயல்படுத்தப்படுகிறது.

ரூ.4,730 கோடியில் விக்கிரவாண்டி – கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலை பணி

விக்கிரவாண்டி – கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலை திட்டத்தின் ரூ.4,730 கோடி செலவில் பணி நடைபெற்று வருகிறது. இது தமிழகத்தின் சாலை அமைப்பில் பெரும் முதலீடாகவும், டெல்டா பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய சாலையாக அமைந்துள்ளது. சோழபுரம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை, 48 கிலோ மீட்டர்கள் மற்றும் சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பகுதி, சுமார் 50 கிலோ மீட்டர்களை உள்ளடக்கியது. இந்த சாலை மூலம் டெல்டா பகுதி மக்கள் மிகவும் பலனடைவார்கள்.

தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் வரையிலான சாலைப் பகுதி திறக்கப்பட்டது, டெல்டா பகுதிக்குச் செல்லும் குடியிருப்பாளர்களுக்கும் பயணிகளுக்கும் ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும், ஏனெனில் அவர்கள் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தை சுமார் 30 நிமிடங்களில் அடைய முடியும். தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையேயான தற்போதைய சாலையில் பயணம் செய்ய சுமார் 75 முதல் 90 நிமிடங்கள் ஆனது. இப்போது, கும்பகோணத்திலிருந்து திருச்சியை 90 நிமிடங்களில் கூட அடையலாம் என்று கூறப்படுகிறது. பல நகரங்கள் இணைப்பு இந்த நெடுஞ்சாலை விக்கிரவாண்டியில் தொடங்கி மானாமதுரை வரை 164 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பண்ருட்டி, வடலூர், ஆனைக்கரை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் வழியாக செல்கிறது. மேலும் இந்த நகர்ப்புற மையங்களை மிகவும் திறமையாக இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோழபுரம் - தஞ்சாவூர் நான்கு வழிப்பாதை

சோழபுரம் - தஞ்சாவூர் நான்கு வழிப் பிரிவு 48.3 கி.மீ நீளத்திற்கு இயங்குகிறது மற்றும் இரண்டு பைபாஸ் பிரிவுகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 15 வாகன சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில், இன்னும் பணிகள் நடைபெற்று வருகிறது, இது சுமார் 50 கி.மீ நீளம் கொண்டது, இதில் மூன்று பைபாஸ் சாலைகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 20 மேம்பாலங்கள் உள்ளன. இந்தப் பிரிவின் பணிகள் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவாக சாலை திறக்கும் பட்சத்தில் பொதுமக்களின் பயண நேரம் குறையும், மேலும் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget