மேலும் அறிய

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி; ட்விஸ்ட் வைத்த வேல்முருகன்

அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமியின் நணபர்கள் உறவினர்கள் அனைவரும் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது - வேல்முருகன்

விழுப்புரம்: இன்று வரை திமுக கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது. கச்சத்தீவு கொடுத்ததில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது என செல்லப்பருந்ததை விளக்கி அறிக்கை வெளியிட வேண்டும் விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
 
விழுப்புரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன்...
 
திருச்சியில் வெளிநாடு செல்பவர்களுக்கான உடல் தகுதியில் மோசடி நடைபெறுகிறது. நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆட்சியருக்கும், காவல் ஆணையருக்கும் தெரிவிக்கிறார்கள். மோசடியில் ஈடுபடும் நிறுவனம் மற்றும் இடைத்தார்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இறந்தவர்களை ஊர்களுக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளது. இதற்காக சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
ஐஐடி இயக்குனரின் கருத்துக்கு பதில் அளித்த வேல்முருகன்:
 
அவர் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உத்தரபிரதேசத்தில் கோமியத்தையும், மாட்டு சாணத்தையும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள். அதற்கு முன்னோடியாக தமிழர்களையும் அப்படி கோமியம் குடித்த உயிர் வாழுங்கள் என்று கூறுகிறார். இது ஒரு கல்வியாளருக்கு அழகல்ல. இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஐஐடி பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி அறிவியலுக்கு புறம்பாக கருத்தை சொல்வதை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன். 
 
கச்சத்தீவு கொடுத்ததை ராஜதந்திரம் என செல்வப்பெருந்தகை கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வேல்முருகன்:
 
இதில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது என செல்வப்பெருந்தகை கூற வேண்டும். இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
மேலும், தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுகிறது. 36 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். செல்வப்பெருந்தகை இதற்கு பதில் சொல்ல வேண்டும். இந்திராகாந்தியின் ராஜதந்திரம் ஈழ மக்களுக்கோ, தமிழ்நாட்டு மீனவர்களுக்கோ என்ன நன்மை என செல்லப்பெருந்தகை விரிவான ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். பிறகு அது குறித்து கருத்து சொல்கிறேன். 
 
இன்று வரை திமுக கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது
 
இன்று வரை திமுக கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது. கூட்டணி குறித்து நான் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதிக்கான திட்டங்களை நான் சட்டமன்றத்தில் குரல் உயர்த்தி கேட்கிறேன் அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பாசிச பாஜக அரசின் அடாவடி திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் எதிரான கூட்டணி. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தாது என அறிவித்துள்ள நிலையில் ஒரு பைசா நிதி தர மாட்டேன் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு ரூபாய்க்கு 29 பைசாவை எங்களுக்கு பிச்சையாக போடுகிறார்கள். மீதி 90% பணத்தை ஒன்றிய அரசு எடுத்துச் செல்கிறது. இன்றைக்கு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற பாசிச பாஜக என்ற கூட்டணி வரக்கூடாது.
 
அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக எடப்பாடி.பழனிசாமியின் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம். கோடநாடு வாழ்க்கை சிபிஐ விசாரிக்கும் என கூறுகிறார்கள். இது தான் இந்தியாவை ஆளும் கட்சியின் லட்சணமா.
 
தமிழ்நாட்டில் புயல்கள் வந்தது. ஆனால் தமிழ்நாடு கேட்ட ஆராயிரம் கோடியில் வெறும் 90 ஆயிரம் கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நிதி இல்லாத காரணத்தினால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க முடியவில்லை. தமிழ்நாட்டின் கடன் 8 ஆயிரத்து 34,000 லட்சம் கோடி கடன் உள்ளது.
 
தமிழக மக்களின் வரிப்பணத்தை மட்டும் தங்கள் கஜானுக்கு திருப்பிக் கொள்கிறது. மோடியும், நிர்மலா சீதாராமனும் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பாஜக அணியை வீழ்த்துவதற்காக மக்கள் உரிமைப் போராட்டத்தை தான் நடத்துகிறேன். கூட்டணிக்கும் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் பொதுக்குழுவை கூட்டி செய்தியாளரிடம் கண்டிப்பாக கூறுவேன்.
 
இந்த அரசுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு:
 
மதிப்பெண் போடுவதற்கு நான் ஐயா இல்லை என்றும். நான் பாமகவை தாண்டி வளர்ந்து விட்டேன். தமிழ்நாடு முழுக்க கொண்டாடும் ஒரு பொது தலைவராக வளர்ந்து விட்டேன். மீண்டும் என்னை என் பழைய இடத்திற்கு கொண்டு போய் நிறுத்துகிறீர்களா? என கேள்வி எழுப்பி விடைபெற்று சென்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget