![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
கடலூரில் காதலன் முன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு
கடலூரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கிபதிவு, DIG, SP மற்றும் DSP ஆகியோர் விசாரணை
![கடலூரில் காதலன் முன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு Three persons have been arrested under eight sections for sexually assaulting a woman in Cuddalore கடலூரில் காதலன் முன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/29/d31a49c36db1ae1186bc7e011428007a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடலூர் தலைமை தபால் நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 21 வயது பெண்ணொருவர் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அரோக்கியராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர், தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவல்துறையினர் சென்று பார்த்த போது அழுது கொண்டிருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவலை காவல்துறையினரிடம் அந்தப் பெண் கதறி அழுது கொண்டே தெரிவிக்கையில், கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் தனது காதலனுடன் பாழடைந்த வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, மூன்று வாலிபர்கள் திடீரென்று உள்ளே நுழைந்தார்கள். அப்போது எங்களிடம் ரகளை ஈடுபட்டனர். பின்னர் என்னையும் எனது காதலனையும் ஒன்றாக சேர்த்து வைத்து செல்போனில் படம் பிடித்து வெளியில் காண்பித்து விடுவோம் என மிரட்டினர் .
பின்னர் திடீரென்று எனது காதலனை இரண்டு நபர்கள் வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டனர். இதனால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்து தப்ப முற்ச்சி செய்தேன் . பின்னர் ஒரு நபர் நான் எவ்வளவோ தடுத்தும், கதறி கெஞ்சிய போதும் என்னை வலுக்கட்டாயமாக என் காதலன் முன்பு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், இதனை தொடர்ந்து காதலன் செல்போனையும் பிடிங்கிக் கொண்டு பின்னர் மூன்று பேரும், என்னையும் என் காதலனையும் மிரட்டி, இந்த நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் யாரிடமும் கூறக்கூடாது என கூறி அனுப்பி வைத்தாக கதறி அழுது கொண்டு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பெண்ணின் காதலனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர் யார் என தெரியவில்லை என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து வந்து காதலனிடம் காண்பித்தனர். அப்போது காதலியை வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று நபர்கள் இவர்கள் என அடையாளம் காண்பித்தார். மேலும் காதலனிடம் இருந்து பறித்த செல்போன் ஒரு நபரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து திருப்பாதிரிப்புலியூர் காவதுறையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தி கிஷோர்,சதீஷ், ஆரிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், காவல் துணை கண்காணிப்பாளர் காரிகால் பாரிசங்கர் ஆகியோர் அந்த 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.மேலும் வடக்குமண்டல டிஐஜி பாண்டியன் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் பார்வையிட்டு வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பெண்ணிடம் நடத்த விசாரணையில் அடிப்படையில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மருத்துவ அறிக்கை வந்த பின்னர் முழு விவரம் தெரியவரும் என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)