மேலும் அறிய

Cuddalore: ஆதரவற்ற ஏழை மாணவிகளின் பல ஆண்டு கோரிக்கையை 10 நாளில் தீர்த்த கடலூர் கலெக்டர்

கடலூர் அரசு சேவை இல்லத்திலிருந்து அரசு பள்ளிக்கு இலவச பேருந்து சேவை மனு அளித்த அடுத்த நாளே ஆக்ஷனில் இறங்கிய ஆட்சியர்.

தமிழ்நாடு சமூக நலத்துறை கீழ்  கடலூர் செம்மண்டலம் பகுதியில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த, ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அரசு சேவை இல்லத்தில் தங்கி மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
 
அரசு சேவை இல்லத்திலிருந்து மஞ்சக்குப்பம் அரசு பள்ளிகளுக்கு உரிய பேருந்து பயண வழி இல்லாததால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நடந்தே செல்லும் நிலை தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சமூக நலத்துறையிலிருந்து அரசு சேவை உள்ள மாணவிகள் கல்வி நிலையங்கள் சென்றுவர பேருந்து கேட்டு பல மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு அளித்து ஆதரவற்ற இந்த குழந்தைகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி வந்தனர்.

Cuddalore: ஆதரவற்ற ஏழை மாணவிகளின் பல ஆண்டு கோரிக்கையை 10 நாளில் தீர்த்த கடலூர் கலெக்டர்
 
இந்த நிலையில் கடந்த  கல்வி ஆண்டோடு இவர்களுக்கு உதவி கரம் நீட்டி வந்த அன்னை சத்யா அம்மையார் நினைவு குழந்தைகள் காப்பகத்தின் பேருந்தும் இனி முடியாது என கையை விரித்து விட மீண்டும் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கதவுகளையே இந்த சமூக நலத்துறை தட்டி தனது கோரிக்கையை மீண்டும் தபால் வடிவில் கொடுத்தது. இப்போது ஆட்சியர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நாகப்பட்டினத்தில் இருந்து புதிதாக கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற அருண் தம்புராஜ். குழந்தைகள் கல்வியில் மிகுந்த கவனமும், அக்கறையும் காட்டும் இவரின் கைகளுக்கு இந்த மனுக்கள் சென்ற அடுத்த நாளே போக்குவரத்து துறையின் அதிகாரிகள் சமூகநலத் துறையின் கோரிக்கையை ஏற்று பேருந்து வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பள்ளிகள் திறக்கப்பட்டது இந்நிலையில் தற்போது இங்கு பயிலும் சுமார் 145 மாணவிகள் அரசு சேவை இல்லத்திலிருந்து தங்கள் கல்வி பயிலும் கல்வி நிலையங்களுக்கு பிரத்யேக பேருந்தில் மகிழ்ச்சியோடு பயணம் செய்கின்றனர். 

Cuddalore: ஆதரவற்ற ஏழை மாணவிகளின் பல ஆண்டு கோரிக்கையை 10 நாளில் தீர்த்த கடலூர் கலெக்டர்
 
இதற்கான நிகழ்ச்சி கடலூர் அரசு சேவை இல்லத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்காக வழங்கப்பட்ட பிரத்தியேக பேருந்து சேவையை துவக்கி வைத்தனர்.
 
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களின்  இந்த செயலை சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் மாணவிகள் மற்றும் கடலூர் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Embed widget