மேலும் அறிய

Anbumani vs Ramadoss: முடிவுக்கு வந்தது அன்புமணி - ராமதாஸ் மோதல் ; தந்தையை பார்க்க வந்த மகன்

நேற்று மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது தந்தையை சந்திக்க வந்த அன்புமணி.

பாமக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் ஜி.கே.மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸை சந்திக்க அன்புமணி வருகை தந்தார். 

கட்சி நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவு இல்லை

பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு நேற்று மருத்துவர் ராமதாஸ் முகுந்தனுக்கு வழங்கப்பட்ட நிலையில் அந்த பொறுப்பில் இருந்து தற்போது விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த முகுந்தன் தாமாகவே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் மேலும் ஏற்கனவே வகித்து வந்த மாநில ஊடகப் பேரவை செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாமக பொதுக்குழு கூட்டம்:

பாட்டாளி மக்கள் கட்சியின் "2024க்கு விடை கொடுப்போம் 2025 ஐ வரவேற்போம்" புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. முதலாவதாக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கபட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தீர்மானம் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பொதுக்கூட்டத்தில் நிறைவாக பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தன் பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்து, அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், “யார்... எனக்கா...?” என்றார். அதற்கு ராமதாஸ் “ஆமாம்” என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு தொடங்கியது.

எனக்கெல்லாம் வேண்டாம்...

அப்போது அன்புமணி, "எனக்கெல்லாம் வேண்டாம்.. அவன் இப்போது தான் கட்சிக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. உடனடியாக அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு என்றால், அவனுக்கு என்ன அனுபவம் இருக்கு? நல்ல அனுபவசாலிக்கு அந்தப் பொறுப்பைக் கொடுங்கள். முகுந்தன் பரசுராமனுக்கு வேறு ஏதாவது பதவி கொடுங்கள். இப்போது பேசும்போது கூட நான் அதைத்தான் கூறினேன். களத்தில் நல்ல ஆட்கள், திறமையானவர்கள் வேண்டும் என்று பேசினேன். வந்த உடனே இளைஞர் சங்க பொறுப்பைக் கொடுத்துக்கிட்டு" என்று ஆவேசமாக பேசினார். உடனே கீழே இருந்த பாமக நிர்வாகிகள் முகுந்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேடையிலேயே முற்றிய வாக்குவாதம் :

அதற்கு ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க முடியாவிட்டால், யாரும் இனி இந்த கட்சியில இருக்க முடியாது, என்றார். அதற்கு அன்புமணி, “அது சரி” என்றார். அப்போது ராமதாஸ், 'என்ன சரி, சரி என்றால் போ அப்போ' என்றார்.

பனையூரில் என்னை வந்து பார்க்கலாம் 

பின்னர் மருத்துவர் ராமதாஸ், முகுந்தனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார்,” என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி, “குடும்பத்தில் இருந்து இன்னொருவரை தூக்கிப் போடுங்கள்,” என்று கூறி, கையில் இருந்த மைக்கை மேஜை மீது எறிந்தார். பின்னர் பேசிய அவர், சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி தொலைப்பேசி எண்ணை அறிவித்து, இந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள், என்னைத் தொடர்பு கொண்டு அனைவரும் வந்து எப்போது வேண்டும் என்றாலும், என்னை வந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.

அதற்குள் இடையில் மருத்துவர் ராமதாஸ், மீண்டும் கூறுகிறேன்..உங்களுடைய இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன். இன்னொரு அலுவலுவகம் கூட திறந்து நடத்திக்கொள். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லையென்றால், அதற்கு வேறு ஒன்றும் நான் சொல்ல முடியாது என்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து சலசலப்பில் ஈடுபட்டனர். அதற்கு ராமதாஸ், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். விருப்பம் இல்லாதவர்கள், என் பேச்சைக் கேட்காதவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றார், 

தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை சந்தித்தார் பாமக தலைவர் அன்புமணி

பாமக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் நேற்று மாலை ஜி. கே மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார்.

அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலக உள்ளதாக தகவல்

பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு நேற்று மருத்துவர் ராமதாஸ் முகுந்தனுக்கு வழங்கப்பட்ட நிலையில் அந்த பொறுப்பில் இருந்து தற்போது விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த முகுந்தன் தாமாகவே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் மேலும் ஏற்கனவே வகித்து வந்த மாநில ஊடகப் பேரவை செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget