மேலும் அறிய

புதுச்சேரியின் ஒருநாள் மாவட்ட ஆட்சியரான அரசுப்பள்ளி மாணவி

நானும் நன்றாக படித்து ஆட்சியராக தொடர்ந்து மக்களுக்கு பணி செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

பள்ளி மாணவர்களிடையே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மக்கள் பணி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என பதவிகளை ஒருநாள் கொடுத்து செயல்பட செய்யும் நிகழ்ச்சி புதுவையில் அவ்வப்போது நடத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.சி.சி. மாணவி ஒருவருக்கு , காவல் கண்காணிப்பாளர் ஒருநாள் பதவி வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு ஒருநாள் மாவட்ட ஆட்சியர் பணி வழங்கப்பட்டது. புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார்.

காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற ஆட்சியர்  மணிகண்டன், ஆட்சியரின் இருக்கையில் அமரவைத்து, பணி குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக ஆட்சியருக்கு வரும் கோப்புகள், புகார்களை கையாளுவது, பொதுமக்களை அணுகுவது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். அதன்பின் அவர் ஆட்சியர் மணிகண்டனுடன் சென்று நகரப்பகுதியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் புதுவை சட்ட சபைக்கு அவர் வந்தார். அவர் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு சபாநாயகர் செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடக்கும் மைய மண்டபத்துக்கு அவரை அழைத்து சென்ற சபாநாயகர் செல்வம் சட்டசபையின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினார். அதன்பின் அவர் சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

மாணவி ஐஸ்வர்யா கூறியதாவது:- புதுவையில் ஒருநாள் ஆட்சியராக பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாதது. சாதாரண பொதுமக்களின் குறைகளை கேட்டு அவைகளை நிவர்த்தி செய்வது குறித்து அறிந்துகொண்டேன். மாவட்ட ஆட்சியர் என்றால் கையெழுத்திடுவது மட்டுமே வேலையல்ல. மாவட்ட ஆட்சியருக்கு நிறைய வேலைகள் உள்ளன. மக்களுக்கு நிறைய பணிகள் செய்யும் பதவி அது. இதை நான் புரிந்துகொண்டேன். மாவட்ட ஆட்சியரிடம் கூறினால் தனது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். உயர் பதவியில் இருப்பவர்கள் எப்படி பொதுமக்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஆட்சியர் மணிகண்டனை பார்த்து தெரிந்துகொண்டேன். நானும் நன்றாக படித்து ஆட்சியராக தொடர்ந்து மக்களுக்கு பணி செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

ஆட்சியர் மணிகண்டன் கூறியதாவது:- அரசு செயல்படுத்தும் மக்கள் நலப்பணிகள் குறித்து அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியருடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இப்போது மாணவி ஐஸ்வர்யாவுக்கு ஆட்சியர் பணி வழங்கப்பட்டது

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget