Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown (11.03.2025): மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (11- 03-2025) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Puducherry Power Shutdown (11.03.2025): மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (11- 03-2025) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
புதுச்சேரி மாநிலம் மரப்பாலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில் மின்சாரம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மறைமலை அடிகள் சாலை முதல் எல்லை பிள்ளைச்சாவடி வரை மற்றும் நோணாங்குப்பம் முதல் ராஜீவ்காந்தி சிலை வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வில்லியனூர் - சேதராப்பட்டு மின்பாதை
வில்லியனூர் - சேதராப்பட்டு மின்பாதையில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புதுநகர் (ஒரு பகுதி), ரெட்டியார்பாளையம் (ஒரு பகுதி), காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வானத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர் சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி,
ஜவகர் நகர், பூமியான்பேட்டை வீட்டு வசதி வாரியம் (ஒரு பகுதி), ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்போர்ட் சரவணன் நகர், பொன் நகர், ஜவகர் நகர் குடியிருப்பு, கோல்டன் அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. பொதுமக்கள், வணிகர்கள் அதற்கு ஏற்றவாற் தங்களை பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் மின் நிறுத்தம் மாற்றுதலுக்கு உட்பட்டது எனவும் முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் சார்ஜ் உள்ளிட்ட அடிப்படைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மின்துறை தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

