மேலும் அறிய

Pongal 2025: நெருங்கும் பொங்கல் பண்டிகை ; தயாரான பன்னீர் கரும்புகள்....

இந்தாண்டு புயலால் கூடுதல் இழப்பு காரணமாக, ஒரு கரும்புக்கு ரூ.23 முதல் ரூ.25 வரை உயர்த்தி வழங்க வேண்டும், தரகர்களின்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை

விழுப்புரம்: பன்னீர் கரும்புகள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் இந்தாண்டு ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் 30 சதவீதம் கரும்புகள் சேதமாகி, இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் சேதம்:

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், மரக்காணம், நடுக்குப்பம், வானூர் மற்றும் விழுப்புரம் அருகே பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம், பேரங்கியூர், கரடிப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில், ஆண்டு தோறும் பன்னீர் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். ஏப்ரல் - மே மாத காலங்களில் இந்த பன்னீர்கரும்பை, நடவு செய்து பயிரிடுகின்றனர். 10 மாத காலத்தில் நன்கு வளர்ந்த உடன், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கரும்பு அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இதையும் படிங்க: மீடியன் இல்லாத பாலம்.. கனமழையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. திக் திக் நிமிடங்கள்!

குறிப்பாக தை பொங்கல் பண்டிகை கொண்டாடும் தமிழக மக்கள், இந்த பன்னீர் கரும்பை வைத்து படையலிடுவதும், இனிப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதால் சுவைத்தும் மகிழ்கின்றனர். விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில், இந்தாண்டும் விவசாயிகள் பலர் 250 ஏக்கர் பரப்பில் பன்னீர் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது, 9 மாத பயிராக செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. தோகைகளை கழித்து, தற்போது கரும்பினை உள்ளூர் பகுதியில் சில்லரையில் விற்க தொடங்கியுள்ளனர். ஜனவரி மாதம் தொடக்கத்தில் அறுவடை தொடங்கும், இதே போல், தை பொங்கல் நாளின் நெருக்கத்தில் முழு அளவில் அறுவடை நடைபெறும். ஆனால், இந்தாண்டு சமீபத்தில் பெய்த பெஞ்சல் புயல் கனமழையில் பன்னீர் கரும்பு பயிர்கள் பாதித்து விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

கரும்பு விலையை ரூ.25 ஆக உயர்த்த கோரிக்கை:

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கூறுகையில்... இந்தாண்டும் ஏராளமான விவசாயிகள் இந்த கருப்பு கரும்பை பயிரிட்டுள்ளனர். ஜனவரி தொடக்கத்தில் அறுவடை தொடங்க உள்ளது. ஆனால், இம்மாத தொடக்கத்தில் பெய்த ஃபெஞ்சல் புயல் கனமழையால் தென்பெண்ணை ஆற்றையொட்டிய இந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு, பன்னீர் கரும்புகள் சாய்ந்தும், விழுந்தும் சேதமடைந்துள்ளது. 30 சதவீதம் கரும்புகள் ஒடிந்தும், சாய்ந்தும் வீணாகி விட்டது.

இதையும் படிங்க: மாணவி பாலியல் புகாரில் இன்னொரு சார் இருக்கிறார்; போலீஸ் மறைக்கிறது : இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு

ஒரு ஏக்கர் பன்னீர் கரும்பு சாகுபடிக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகிறது

ஒரு ஏக்கர் பன்னீர் கரும்பு சாகுபடிக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. கரும்பு விதைக்கே ரூ.40 ஆயிரம் ஆகிறது. வளர்ந்த பிறகு 15 நாளிற்கு ஒருமுறை, தொடர்ச்சியாக சோலை கழிக்கவும், உரமும் இடவேண்டும். இதில் பராமரிப்பு செலவு அதிகம். இந்தாண்டு புயல் மழையால் சாய்ந்த கரும்பினை ஆட்கள் வைத்து நிமிர்த்தியும், மண் அணைப்பதும் என கூடுதலாக ரூ.30 ஆயிரம் செலவாகியுள்ளது. அரசு தரப்பில் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு கரும்பு கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு ஒரு கரும்பு ரூ.21க்கு வாங்கினர். இந்தாண்டும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என கூறியுள்ளனர்.

ஒரு கரும்புக்கு ரூ.23 முதல் ரூ.25 வரை உயர்த்தி வழங்க வேண்டும்

இந்தாண்டு கூடுதல் இழப்பு காரணமாக, ஒரு கரும்புக்கு ரூ.23 முதல் ரூ.25 வரை உயர்த்தி வழங்க வேண்டும், தரகர்களின்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான், விவசாயிகளுக்கான இழப்பீடை ஓரளவிற்கு ஈடுகட்ட முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
Embed widget