மேலும் அறிய

விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

பள்ளி, கல்லூரி மாணவர்களை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து முடிதிருத்தம் பணியை காவல்துறையினர் மேற்கொண்டது பாராட்டிற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன. மேலும் சிதம்பரம் நகரை சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாள்தோறும்  பள்ளி, கல்லூரி, ஐடிஐ  பாலிடெக்னிக் என சிதம்பரம் நகருக்கு வந்து செல்கின்றனர்.


விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

இந்த சூழலில் கல்வி பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கற்ற முறையில் லைன் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் எனத் தலைமுடியை டிஸைன் டிஸைனாக வெட்டிக்கொண்டு வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களில் பள்ளிக்கு வருவதைப் பார்க்க முடிகிறது. இப்படியான சிகை அலங்காரத்தினால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் குறைந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. இதுபோன்று முடி வளர்த்து வருவது கலாச்சாரமாக மாறி வருவதுடன், இந்த ஹேர் ஸ்டைல்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாகி மாணவர்களிடையே இதனால் கடும் மோதல் போக்கும் உருவாகி வருகிறது. மாணவர்களை பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எவ்வளவு கூறியும், அவர்களின் இந்த ஹேர் ஸ்டைலை மாற்ற முடியவில்லை.


விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

இந்நிலையில், இதனை தடுக்கும் வகையில் சிதம்பரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியில் இறங்கினர். தொடர்ந்து ஹேர் ஸ்டைல் தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டு, அப்போது, தலை முழுவதும் அதிக முடி, சீரற்ற முறையில் சிகை அலங்காரம் வைத்திருந்த கல்லூரி, ஐடிஐ, பள்ளி மாணவர்களை  சிதம்பரம் காவல்துறையினர் ரவுண்டு கட்டி பிடித்தனர். பின்னர், பேருந்து நிலையம் என்றும் பாராமல், மாணவர்கள் என்றால் இப்படித்தான் முடி வெட்டி இருக்க வேண்டும் என கூறி அவர்களுக்கு அங்கேயே முடி திருத்தம் செய்தனர். மேலும், அவர்களுக்கு கல்வி பயிலும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். 


விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

இதில் கல்லூரி மாணவர் ஒருவர் எக்ஸாம் முடிந்து தேர்வில் வெற்றி பெற்ற பிறகு கோயிலுக்கு சென்று மொட்டை அடிக்க போறேன் சார் என்று சொன்னது காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது, மாணவர்களுக்கு காவல்துறையினர் முடி திருத்தம் செய்ததற்கு ஒரு புறம் பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தாலும், கடந்த ஆண்டு, வேலூர் அண்ணாசாலையிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் இப்படியான ஹேர்கட்டுடன் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சொந்தச் செலவில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே சிகை அலங்காரம் செய்துவிட்டார். சிகையைச் சீர்படுத்திய தலைமை ஆசிரியரின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், அந்த நேரத்தில் அந்தச் செயல் விமர்சனத்துள்ளாகி சர்ச்சையைக் கிளப்பியது.


விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

அதுபோன்று இப்படியான ஹேர்ஸ்டைல்களில் மாணவர்கள் பள்ளிக்குவந்தால், சிகை அலங்காரம் செய்துவிட்ட சலூன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருப்பதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் சிதம்பரம் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு பெருகுமா? அல்லது விமர்சனம் அதிகரிக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Embed widget