மேலும் அறிய

என்எல்சி நிறுவன முத்தரப்பு கூட்டம் - பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வெளிநடப்பு

நிலம் மற்றும் வீடு உடைய உரிமையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சரியீட்டுத் தொகை சுமார் 72 லட்சம் வரை வழங்கப்படும் என நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தகவல்.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் என்.எல்.சி .இந்தியா நிறுவனத்திற்கு நில எடுப்பு பணி தொடர்பாக  அனைத்து கட்சி மற்றும் என்எல்சி நிர்வாகம்,மாவட்ட நிர்வாகம் என முத்தரப்பு கூட்டம் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
 
தொழிலாளர் நலன் மற்றும்  திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில்  மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன் புவனகிரி அருண்மொழித்தேவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னாள் எம்எல்ஏ துரை சரவணன், வி.சி.க. ம.தி.மு.க. , கம்யூனிஸ்ட்  உட்பட பல்வேறு கட்சி மாவட்ட செயலாளர்கள், என்எல்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
 
 இந்த நிலையில் இக்கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்காததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வெளிநடப்பு செய்தார். இக்கூட்டம் நடப்பதை அறிய வந்த ஏராளமான விவசாயிகளை அனுமதிக்காமல், ஆங்காங்கே காவல்துறையை வைத்து மிரட்டியதும், ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
 

என்எல்சி நிறுவன முத்தரப்பு கூட்டம் - பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வெளிநடப்பு
 
 புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் (அதிமுக) சில கோரிக்கைகளை வைத்து பேசிவிட்டு வெளியேறினார்.
 
 மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி சம்பந்தமாக ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த காலங்களை விட உயர்த்தப்பட்ட சரியீட்டுத் தொகை, மறுவாழ்வு, மறு குடிமர்வுக்கான பணப்பலன், வேலைவாய்ப்பு என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 
 குறிப்பாக உயர்த்தப்பட்ட சரியீட்டுத்தொகை ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு உடைய உரிமையாளர்களுக்கு சுமார் 73 லட்சம் வரை என சரியீட்டு தொகையாகவும், மற்றும் மறுவாழ்வு, மறு கூடியவர்களுக்கான பணபலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
 
 ஏற்கனவே ஏக்கர் ஒன்றுக்கு 15 லட்சம் என இருந்ததை தற்போது தமிழக அரசு 25 லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும் நில எடுப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த என்எல்சி நிறுவனத்தின் சி எஸ் ஆர் எனப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். என்எல்சி நிறுவனத்தில் ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு, நில எடுப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட டிப்ளமோ ஐடிஐ 3 ஆண்டுகள் தொழிற்கல்வி க்கான பயிற்சி 500 நபர்களுக்கு வழங்கி அடுத்த நான்காண்டுகளில் நிரந்தர வேலை வாய்ப்பு என பல்வேறு பலன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இதுவரை கூடுதல் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த கத்தாழை கறி வெட்டி வளையமாதேவி கீழ் பாதி, வளையமாதேவி மேல் பாதி ஆகிய கிராமங்களில் இருந்து பெறப்பட்ட 548 விண்ணப்பங்களில் 250 நபர்களுக்கு 15.68 கோடி  பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
 

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget