![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
வடகிழக்கு பருவமழை: மரக்காணத்தில் மீட்பு பணிகள் குழு குறித்து மாநில தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆய்வு
விழுப்புரம்: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மீட்பு பணிகள் குழு தயார் நிலை குறித்து மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் மரக்காணத்தில் ஆய்வு ..
![வடகிழக்கு பருவமழை: மரக்காணத்தில் மீட்பு பணிகள் குழு குறித்து மாநில தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆய்வு North East Monsoon: State Fire and Rescue Department director Marakanam examines the rescue team. வடகிழக்கு பருவமழை: மரக்காணத்தில் மீட்பு பணிகள் குழு குறித்து மாநில தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆய்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/4ea778de495f2b2c303fe374388214851667401394978194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது, இந்த பருவமழையானது பல இடங்களில் கொட்டி தீர்த்து வருகின்றது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது, இதனால் இந்த வடகிழக்கு பருவ மழையில் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ரவி மரக்காணம் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ரவி கூறியதாவது :-
தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது, இந்த பருவமழை நான் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடலோர மாவட்டங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மரக்காணம் பகுதியிலும் பருவ மழையை எதிர்கொள்ள மீட்பு பணிகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஆய்வினைத் தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்யப் போகிறேன் என கூறினார். அப்பொழுது தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வீரர்கள் உடன் இருந்தனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான மரக்காணம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் கடலோர பகுதியில் அழகன் குப்பம், வசவன் குப்பம், கைப்பாணிக் குப்பம், எக்கியர் குப்பம், புதுக்குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், முதலியார் குப்பம் உள்ளிட்ட 19 மீனவர் குப்பங்கள் உள்ளன. கடல் சீற்றம் காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மேடான பகுதிக்கு டிராக்டர் மூலம் கட்டி இழுத்து செல்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)