மேலும் அறிய

இரு மொழி கொள்கைதான் இருக்கும், மூன்றாவது மொழி தேவையில்லை - கடுப்பான அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் தமிழ், உலக மொழியான ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கைதான் இருக்கும். மூன்றாவது மொழி தேவையில்லை - அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஆர் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி பாராட்டினார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.  மும்மொழிக் கொள்கையை ஏற்காதவர்களுக்கு நிதி வழங்க மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இதற்கு தமிழக முதல்வர் பதிலளித்துள்ளார். 1967 அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் இருமொழிக் கொள்கை உள்ளது. தமிழும் உலகம் மொழியான ஆங்கிலமும் இருக்கும்பொழுது வேறு மொழி தேவையில்லை. இரு மொழி கொள்கைதான் தமிழகத்தில் இருக்கும் இதனை தமிழக முதல்வர் தெளிவாக பதில் சொல்லியுள்ளார்.

படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தனியார் துறை நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட ஒப்பந்தம் மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டு வருகிறது.பெருகி வரும் தொழில் வளர்ச்சியின் காரணமாக, தற்போது தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. படித்த இளைஞர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெறும்பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், ஒவ்வொரு மூன்றாம் வெள்ளிக்கிழமையும், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாலும் இதுநாள் வரை 100 கலைஞர் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் உட்பட 1960 சிறிய மற்றும் பெரிய வேலைவாய்ப்பு முகாம்களில் 54,857 வேலையளிக்கும் நிறுவனங்களில் 3815 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2,33,758 வேலைநாடுநர்கள் பணிவாய்ப்பினை பெற்றுள்ளனர்.  இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 173 தனியார் துறை நிறுவனங்களும், 2271 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். இதில், 7 மாற்றுத்திறனாளிகள் உட்பட 416 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 12 நபர்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனர். 182 நபர்கள் வேலைவாய்ப்பிற்கான இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதிபெற்றுள்ளனர்.

எனவே, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்வானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, சிறப்பான முறையில் பணிபுரிந்து தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாதவர்கள் மனம் தளராமல் தங்களுடைய திறமைகளை நன்கு வளர்த்துக்கொண்டு அடுத்து நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்திட வேண்டும் என வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget