மேலும் அறிய

மாமன்றக்கூட்டத்தில் மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை - கடலூர் மேயர் சுந்தரி வேதனை

கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை அமைச்சர் நிகழ்ச்சிக்காக புறக்கணித்த கவுன்சிலர்கள்.

கிராமசபை கூட்டத்தைப் போன்று மாநகர சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக முதல்வர் அறிவித்தார். இதன்படி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்நிலையில் அமைக்கப்படும் குழு கவுன்சிலர்களுக்கு தெரியாமல் நியமிக்கப்படுவதாக கூறி கடந்த மாமன்ற கூட்டத்தில் விசிக, பாமக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று கடலூரில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய உடனேயே மீண்டும் பாஜக கவுன்சிலர் சக்திவேல் மற்றும் திமுக கவுன்சிலர்கள் நடராஜன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. நடராஜன் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டு பேசிய மேயர் சுந்தரி ராஜா, மாமன்ற கூட்டத்தில் மேயருக்கும், மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை என வேதனையோடு  தெரிவித்தார்.
 
இதனையடுத்து கடலூரில் உழவர் மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் நிகழ்வு இருந்ததன் காரணத்தினால் கூட்டம் சிறிது நேரத்திலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் 10த்திற்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------------
மன வளர்ச்சி குன்றிய சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை -கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
 
கடலூர் அருகே உள்ள குண்டு உப்பலவாடி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மன வளர்ச்சி குன்றிய சிறுமி. இந்த சிறுமியை அவரது பெற்றோர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த  சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

மாமன்றக்கூட்டத்தில் மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை - கடலூர் மேயர் சுந்தரி வேதனை
 
விசாரணையில் குண்டு உப்பலவாடி பகுதியை சேர்ந்த ராஜ் முகமது மகன் சாகுல் அமீது (42) என்பவர், அந்த மன வளர்ச்சிக்கு குன்றிய சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சாகுல் அமீதை கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் சாகுல் அமீது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து ரூ.6 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா செல்வி ஆஜராகி வாதாடினார்.

தவறான மகப்பேறு அறுவை சிகிச்சை - உடல்நிலை பாதிப்பட்ட பெண்
மாவட்ட ஆட்சியரிடம் புகார்
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
 
எனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது கடந்த 19.9.2022 அன்று கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, ஆண் குழந்தை பிறந்தது. 11 நாட்கள் எனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 14.10.2022 அன்று எனது மனைவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

மாமன்றக்கூட்டத்தில் மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை - கடலூர் மேயர் சுந்தரி வேதனை
 
இதனால் எனது மனைவியை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அங்கு மூன்று நாள் சிகிச்சை அளித்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, கடலூர் அரசு மருத்துவமனையில் செய்த தவறான அறுவை சிகிச்சை காரணமாக வயிற்று வலி ஏற்பட்டதாக கூறினர். அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனையில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்த பின்னரே எனது மனைவிக்கு வயிற்று வலி குணமானது. தற்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் எனது மனைவியின் உடல்நிலை உள்ளது. எனவே தவறான அறுவை சிகிச்சை செய்த கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget