மேலும் அறிய

புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு; சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் தயாரா ? - நாராயணசாமி கேள்வி

புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுநர் தயாரா? -நாராயணசாமி

புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுநர் தயாரா என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் பாரதிய ஜனதா கட்சி  பலம் பொருந்திய கட்சிபோல மாயயை உருவாக்கி வருகிறது. இப்போது அகில இந்திய அளவில் மாற்றம் வந்துகொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போன்ற தலைவர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளை பிரித்து பாஜக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். தொழில்துறை நலிந்துள்ளது. மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். மத்திய அரசின் மோசமான ஆட்சியை கண்டித்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் ராகுல்காந்தி பாதயாத்திரை செல்ல உள்ளார்.

7-ந் தேதி வில்லியனூரில் இருந்து புதுவைக்கு பாதயாத்திரை நடத்த உள்ளோம். 8, 9, 10 தேதிகளில் புதுவை காங்கிரசார் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொள்கிறோம். கடந்த ஆண்டில் உள்ளதையே மீண்டும் பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டுக்கான விவசாய கடன் தள்ளுபடிக்கே இன்னும் அரசாணை வழங்கப்படவில்லை.  புதுவையில் போலியான அரசு நடக்கிறது. 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20க்கும் குறைவானவர்கள் தான் உள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகை ரூ.7 ஆயிரம் என்று அறிவிக்கிறார்கள். 1.87 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து அரசின் உதவித்தொகைகளை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் அரசின் எந்த உதவியும் பெறாதவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்கிறார்கள். இதெல்லாம் அரசு மக்களை ஏமாற்றும் வித்தை. மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறாததால் நிதி நெருக்கடியில் சிக்கி அரசு தவிக்கிறது. புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே சட்டசபையில் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுபோன்ற குற்றச்சாட்டில் தான் டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. புதுவையில் ஆளுநர் ஏன் வாய்மூடி உள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தயாரா பணியிடங்களை நிரப்பவில்லை காரைக்கால் போலகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க நாங்கள் 25 பேருக்கு லைசென்சு வழங்கினோம்.

இந்த ஆட்சியில் 100 ஏக்கர் நிலம் கேரள நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆளுநர் விசாரிக்க வேண்டும். அமைச்சர்களின் அலுவலகங்கள் ஊழல் ஏஜெண்டுகளின் அலுவலகங்களாக மாறிவிட்டன. முதலமைச்சர் ரங்கசாமி 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்பப்போவதாக கூறியுள்ளார். நாங்கள் ஏற்பாடு செய்திருந்த 390 போலீசார் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி அமைந்து 1½ ஆண்டு ஆகியும் வேறு எந்த அரசு பணியிடமும் நிரப்பப்படவில்லை என நாராயணசாமி கூறினார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget