![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கடலூர்: சாதியை சொல்லி தாக்கியதாக மாமனார் மீது மருமகள் கணவனுடன் போலீசில் புகார்
’’மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மணிமாறன் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்த சத்யாவை குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்’’
![கடலூர்: சாதியை சொல்லி தாக்கியதாக மாமனார் மீது மருமகள் கணவனுடன் போலீசில் புகார் Cuddalore: A daughter-in-law and her husband have lodged a complaint with the police against their father-in-law for allegedly assaulting them கடலூர்: சாதியை சொல்லி தாக்கியதாக மாமனார் மீது மருமகள் கணவனுடன் போலீசில் புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/96102a63d76a5abf4cdf7c4f5e2dafc0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பின்னர் மணிமாறன் தனக்கு சேரவேண்டிய சொந்த ஊரில் உள்ள தந்தையின் நிலத்தில் ஒரு பகுதியை கேட்டுப் பெற்றுக்கொண்டார் பின்னர் அங்கு சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர், இந்நிலையில் அவ்வப்போது மணிமாறன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது தந்தை ஜெயகுமார் மற்றும் அவரது அண்ணன் கந்தவேல் ஆகியோர் மனைவி சத்யாவிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர். பின்னர் தற்பொழுது கடந்த 24 ஆம் தேதி மணிமாறன் வீட்டில் இல்லாத நேரத்தில் சத்யா மற்றும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் தனியாக வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த மணிமாறனின் தந்தை ஜெயக்குமார், அண்ணன் கந்தவேலு மற்றும் அவரது மனைவி ராஜசுந்தரி ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்து சத்யாவை சாதியின் பெயரால் தரக்குறைவாக பேசி அவர்கள் வைத்திருந்த வைத்திருந்த கட்டயால் அடித்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.
பின்னர் தொலைபேசி மூலம் கணவருக்கு சத்யா தகவல் தெரிவித்த உடன் மணிமாறன் வீட்டிற்கு வந்துள்ளார் பின்னர் அவரையும் அடித்து தரக்குறைவாக பேசியுள்ளனர், மேலும் மனிமாறனுக்கு பிரித்து கொடுத்துள்ள நிலத்தினை பதிவு செய்ய ஒத்துழைக்காமல் தற்பொழுது மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி வெளியேறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஆதாரங்களுடன் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர் அதில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மணிமாறனின் தந்தை ஜெயகுமார், அண்ணன் கந்தவேல் மற்றும் அவரது மனைவி ராஜசுந்தரி மீது விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)