மேலும் அறிய

கடலூரில் முழு ஊரடங்கில் விதிகளை மீறிய 1009 பேர் மீது வழக்குப்பதிவு - 2.16 லட்சம் அபராதம்

கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 1009 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.2.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் தொற்று மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது, அதேபோல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்திலும் அதன் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரம் தோரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது. 
 

கடலூரில் முழு ஊரடங்கில் விதிகளை மீறிய 1009 பேர் மீது வழக்குப்பதிவு - 2.16 லட்சம் அபராதம்
 
அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபட்டு உள்ளது. கடலூர் மாநகராட்சி மற்றும் பல்வேறு நகராட்சி பகுதிகளில் நிர்வாகம் சார்பில் வாகங்கள் மூலமாக ஒலி பெருக்கி கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கவில்லை. ஆட்டோ, வாடகை வாகனங்களும் முழுமையாக இயக்கப்படவில்லை. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பாா்சல் சேவை கொண்ட உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன.இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் முக்கிய வீதிகள், சந்தைகள் ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டன.
 

கடலூரில் முழு ஊரடங்கில் விதிகளை மீறிய 1009 பேர் மீது வழக்குப்பதிவு - 2.16 லட்சம் அபராதம்
 
மேலும் நேற்று முழு ஊரடங்கினை அடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் 54 சோதனைச் சாவடிகள் அமைத்து 1400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட எல்லை, முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனா். அப்போது, மருத்துவம், அத்தியாவசியப் பணிகள் போன்ற முக்கிய தேவைகளுக்காக சென்றவா்களை மட்டும் காவல் துறையினர் செல்ல அனுமதித்தனா். அதனை தவிர்த்து மற்றவா்களை எச்சரித்து திருப்பி அனுப்பினா்.
 

கடலூரில் முழு ஊரடங்கில் விதிகளை மீறிய 1009 பேர் மீது வழக்குப்பதிவு - 2.16 லட்சம் அபராதம்
 
இதில், நேற்று மட்டும் முகக் கவசம் அணியாமல் வெளியில் வந்ததாக 1,009 போ் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடா்பாக 29 போ் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் ரூ.2.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.மேலும் மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாதது தொடா்பாக கடந்த 7-ஆம் தேதி முதல் இதுவரை 3,711 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.7.56 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget