ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவும் சங்கம் - விண்ணப்பிக்க அழைப்பு!
கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சிறப்பான முறையில் செயல்படுத்த அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு கௌரவ செயலாளர், இரண்டு கௌரவ இணைச் செயலாளர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கிறித்துவ சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் செய்து,வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் பொருட்டு, கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், சிறுதொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம்-1 செயல்பட்டு வருகிறது.
இந்நேர்வில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான சிறுமன்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தினை நல்ல முறையில் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்அவர்களை தலைவராகவும் மகளிர் திட்ட அலுவவரை உபதலைவராகவும், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை பொருளைராகவும் அமைக்கப்பட்டுள்ளது கொண்ட அரசின் வழிகாட்டுதலின் படி, மேற்படி "கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் -2, சிறப்பான முறையில் செயல்படுத்த இக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு கௌரவ செயலாளர், இரண்டு கௌரவ இணைச் செயலாளர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்திற்கு திறன்மிக்க சமூகத் தொண்டாற்றுவதில் ஆர்வமுள்ள கிறித்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சமூகப் பணிகளில் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்ககையோ, நீதிமன்ற வழக்குகளோ நிலுவையில் இருத்தல் கூடாது. இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக தேர்வு செய்யப்படுவர்.
இந்த தகுதிகளுடைய நபர்கள் தங்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி, குடும்ப விவரம் மற்றும் ஏற்கனவே மேற்கொண்ட சமூக தொண்டுகள் ஆகிய விவரங்களுடன் 18.07.2025 ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















