Vellore power Cut (9-12-2025): வேலூரில் நாளை மின்சாரம் தடை! முக்கிய பகுதிகள் இதோ! மின்வெட்டை சமாளிக்க தயாரா?
Vellore Power Cut (9-12-2025): வேலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 09, 2025, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
காவனூர், புங்கனூர், குப்பம், வண்டிக்கால், பாலமதி, சாம்பசிவபுரம், வெங்கடாபுரம், நாய்கந்தோப்பு, வரகூர்புதூர், ஆனைமல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெதம்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, நால்.
அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜி. கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல் மற்றும் சென்னலேரி சுற்றுப்புற பகுதிகள்.
புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர் மற்றும் புதுப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி மற்றும் தாமரைப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.





















