மேலும் அறிய

crime: சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாட்டினால் விபத்து - 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சோகம்

ராமுவின் பின்னால் வந்துகொண்டிருந்த விளாப்பாக்கம் செல்லும் அரசு பேருந்து ராமு மீது மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வேலூரில் சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாட்டினால் ஏற்பட்ட விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை  பரிதாபமாக உயிரிழந்தார். 

வேலூர் சத்துவாச்சாரி கானார் தெருவை சேர்ந்தவர் ராமு வயது (32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா, இவர்களுக்கு 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராமு கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடைக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அவருடைய வேலையை முடித்துக்கொண்டு ஆற்காடு சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது  காகிதப்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் போது சாலையோரம் கட்டப்பட்டிருந்த காளை மாடு ஒன்று திடீரென சாலையின் நடுவே வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத ராமு மாட்டின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் ராமுவின் பின்னால் வந்துகொண்டிருந்த விளாப்பாக்கம் செல்லும் அரசு பேருந்து ராமு மீது மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

 


crime: சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாட்டினால் விபத்து -  3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சோகம்

தகலறிந்து வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து பொது மக்கள் கூறுகையில், “காகிதப் பட்டறை பகுதியில் சுமார் 20, 30 மாடுகள் சுற்றித் திரிகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் சுற்றும் மாடுகளால் பல முறை விபத்து ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு ஒருவர் உயிரே போய்விட்டது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்தவிதை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த நபரின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார்.

 

 


crime: சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாட்டினால் விபத்து -  3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சோகம்

இவரை மட்டுமே நம்பி குடும்பம் இருந்தது. அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அரசு அவருக்கு உதவ வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். உயிரிழந்த நபரின் உடலை தழுவி கதறி அழுத தாய் மற்றும் மனைவியின் சோகக்குறல் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இதேபோல் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிராக்டரில் சென்று கொண்டிருந்த நபர்கள் திடீரென குறுக்கே மாடு வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க டிராக்டர் ஓட்டுநர் வைத்துள்ளார். இதனால் டிராக்டர் சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் தலைகீழ் கவிழ்ந்தது இதனால் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Embed widget