என்ன ஒரு அலட்சியம்? உதவிப் பொறியாளர் சஸ்பெண்ட் - மாநகராட்சி அதிரடி உத்தரவு!
தெருவோரம் நிற்கவைக்கப்பட்டிருந்த தன் வாகனத்தையும் சேர்த்து சாலை போடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இறுகிவிட்டதால் எடுக்க முடியவில்லை.

வேலூரில் பைக் உடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்ட விவகாரத்தில் உதவிப் பொறியாளர் பழனியை இடை நீக்கம் செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டபோது நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது.
ரோட்டில் நின்ற பைக்குக்கும் சிமெண்ட் பூச்சு
காளிகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை ஜூன் 28ஆம் தேதி இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது.
அத்தோடு சேர்ந்து தெருவோரம் நிற்கவைக்கப்பட்டிருந்த தன் இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இறுகிவிட்டதால் எடுக்க முடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.
வண்டிக்கும் சேர்த்து சாலை... பாதிக்கப்பட்ட நபர் வேதனை!
முன்னதாக இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கூறுகையில், "இது என்னுடைய தம்பி வண்டி தான். நேற்று இரவு 11.00 மணிவரை கடையில் தான் இருந்தோம். அதுவரை சாலை போடவுள்ளதாக எந்த அறிவிப்பும் வழங்கவில்லை. மாறாக இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர். அப்போது எங்களது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர்.
இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கின்றனர். இப்போது எங்கள் வண்டி நாசம் ஆகிவிட்டது. முன் அறிவிப்பு கொடுத்திருந்தால் வண்டியை தெருவில் விட்டிருக்க மாட்டோம். அல்லது அவர்களே வண்டியை அப்புறப்படுத்தியாவது சாலை போட்டிருக்கலாம்.
தரமற்ற சாலை அமைப்பு
ஒரு வேலை மனிதன் உறங்கிக்கொண்டிருந்தால் கூட அவனுக்கும் சேர்த்தே சாலை போட்டிருப்பார்கள் போல. எங்கள் பகுதியில் போடப்பட்டு வரும் சாலை சுத்தமாக தரம் இல்லாமல் கடமைக்கு போடப்பட்டு வருகிறது.
தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள். இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது. இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்





















