மேலும் அறிய

குழந்தை திருமணத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும் - திருவண்ணாமலை ஆட்சியர்

குழந்தை திருமணத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும். பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் - திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை கருணாநிதி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் புதுமைப் பெண் திட்டத்திற்கான மாணவிகளுக்கு வரவேற்பு கோப்புறை மற்றும் மாதந்தோறும் ரூபாய் 1,000 உதவி தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் முதல் கட்டமாக 5,697 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். தற்போது 2-ம் கட்டமாக 3,112 மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பெறும் பொருட்டு பற்று அட்டை மற்றும் வரவேற்பு கோப்புறையும் விழாவில் வழங்கப்பட்டது.


குழந்தை திருமணத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும் - திருவண்ணாமலை ஆட்சியர்

 

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்; 

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வீதம் அவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி முடிக்கும் வரை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. வளர் இளம் பருவத்தில் திருமணம் செய்து கொள்வதால் பெண்கள் பல்வேறு உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.


குழந்தை திருமணத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும் - திருவண்ணாமலை ஆட்சியர்

எனவே குழந்தை திருமணத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும். பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் கந்தன், கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி முதல்வர் கே.பி.கணேசன், திருவண்ணாமலை உதவி ஆட்சியர் மந்தாகினி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget