மேலும் அறிய

திருவண்ணாமலை: அரசு பள்ளியின் மேல் தளம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம் - அதிமுக மீது குற்றச்சாட்டு

இந்த சம்பவத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா. வேலுவிடம் கூறி பள்ளி கட்டிடங்களை புனரமைப்பு செய்ய கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தடராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேல்தளம் சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததில் 3  மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர்கள் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை: அரசு பள்ளியின் மேல் தளம்  இடிந்து விழுந்து 3  மாணவர்கள் படுகாயம் - அதிமுக மீது குற்றச்சாட்டு

 

தடராப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 2010- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையில் சுமார் 400-க்கும் மேற்பட்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 6- ஆம் வகுப்பு வகுப்பறையில் 20க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் பயின்று வந்தனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் தினகரன் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார்.

அப்போது திடீரென்று கட்டிடத்தின் மேல் தளத்தில் விரிசல் ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக சிமெண்ட் பூச்சு மாணவர்கள் மீது சரிந்து விழுந்தது. இதில், ஜனார்தனன், தருண்குமார் மற்றும் முகேஷ் என்ற மூன்று மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தினகரன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  பலத்த காயமடைந்த மூன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர் இருசக்கர வாகனத்தின் மூலம்   தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்..

 


திருவண்ணாமலை: அரசு பள்ளியின் மேல் தளம்  இடிந்து விழுந்து 3  மாணவர்கள் படுகாயம் - அதிமுக மீது குற்றச்சாட்டு

இதில், படுகாயமடைந்த முகேஷ் என்ற மாணவனை மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துமனைக்கு வந்து படுகாயம் அடைந்த மாணவர்களை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்த செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி உடனடியாக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவர்களையும், ஆசிரியரை பார்த்து ஆறுதல் கூறினார்.


திருவண்ணாமலை: அரசு பள்ளியின் மேல் தளம்  இடிந்து விழுந்து 3  மாணவர்கள் படுகாயம் - அதிமுக மீது குற்றச்சாட்டு

 

பின்னர் மருத்துவமனையின் வெளியே இருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசிய எம்எல்ஏ கிரி, தடராப்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடங்கள் கட்டி 12 வருடங்கள் ஆகிறது. இந்த பள்ளி கட்டிடங்களை கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுகவினர் சரிவர பராமரிப்பு செய்யவில்லை. பள்ளி கட்டிடங்களுக்கு என பராமரிப்பு தொகையை அளிக்காமல் உள்ளனர். அப்படியே பராமரிப்புக்காக அளிக்கப்பட்ட தொகையினை அதிமுக கட்சி பிரமுகர்களே ஊழல் செய்து விடுகின்றனர். இந்த பள்ளி கட்டிட முறைகேடை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க கூறுகிறேன். மேலும் இந்த சம்பவத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா. வேலுவிடம் கூறி பள்ளி கட்டிடங்களை புனரமைப்பு செய்ய கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget