மேலும் அறிய

திருவண்ணாமலையில் நடந்த பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம் - பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்

’’ஒவ்வொருவரும் வேறுபட்ட புள்ளி விவரங்களின்   தகவல்களை கூறியதால் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகளுக்கு குழப்பம்’’

வடகிழக்கு பருவமழை வரவுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் முழுமையான தகவல்கள் இல்லாமல் பங்கேற்றதால் உயரதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர்.

திருவண்ணாமலையில் நடந்த பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம் - பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்

மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட  பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் வேறுபட்ட புள்ளி விவரங்களின்   தகவல்களை கூறியதால் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஒரு மாதமாக காலமாக நீர் வரத்து கால்வாய்கள் மற்றும் தண்ணீர் அதிகம் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து பருவ மழை காலத்தை முன்னெச்சரிக்கையாக கையாள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் எந்த பணிகளையும் முடிக்காமல் பெரும்பாலான பணிகள் கிடப்பில் வைத்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கண்காணிப்பு அலுவலர் தற்போது பெய்து வரும் மழையில் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது மேலும் கனமழை பொழியும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையும் எனவே அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என காட்டமாக பேசினார்.

திருவண்ணாமலையில் நடந்த பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம் - பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்

அதனைத் தொடர்ந்து வேண்டிய முன்னெச்சரிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் அணையின் நீர்மட்டம், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரசு முதன்மைச் செயலாளர் நீரஜ்குமார், தெரிவிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை எந்த ஒரு பாதிப்பும் இருக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளதாகவும், அதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 56 இடங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 

திருவண்ணாமலையில் நடந்த பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம் - பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்

இதில் தேவைப்படும் அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மழைநீரை சேகரிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,121 பண்ணை குட்டை அமைத்திருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தீரும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் திருவண்ணாமலை மாவட்டம் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். சாத்தனூர் அணையின் மதகுகளை சீரமைக்க ஒரு வருடம் ஆகும் என்றும்   அதற்காக சாத்தனூர் அணையில்   99 அடி அளவிற்கு அணையின் தண்ணீரை சேமிக்கலாம் என்று அவர்  தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget