மேலும் அறிய

திருவண்ணாமலை: ஏரியில் மீன்பிடிக்க சென்ற கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

சோமாசிபாடி அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கிராம நிர்வாக அலுவலரும் ஏரியில் மின் மோட்டார் மூலம் மீன் பிடிப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்ததால் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்லக்குட்டி வயது (35) என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் செல்லகுட்டி இன்று கூலி வேலைக்கு எங்கும் செல்லாததால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சோமாசிப்பாடி ஏரியில் மீன் பிடிப்பதற்காக பச்சையப்பன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டை ஏரிக்கு எடுத்து சென்றார். பம்பு செட்டிற்கு 200 மீட்டர் தூரத்திற்கு வயர் எடுத்துச் சென்று ஏரியில் உள்ள தண்ணீரில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் செல்லகுட்டி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 


திருவண்ணாமலை: ஏரியில் மீன்பிடிக்க சென்ற கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி 

அதனைத் தொடர்ந்து உடனடியாக பச்சையப்பன் நிலத்தில் விவசாயம் மேற்கொண்டிருந்த சிலர் செல்லக்குட்டியின் உடலை அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடுத்து சென்று பார்த்தனர். அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக விவசாய நிலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மின் ஒயர்கள், மின் மோட்டார்களை அங்கிருந்து எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி செல்லக்குட்டி மின்சாரம் தாக்கி இறந்ததை காவல்துறையினருக்கும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் மறைப்பதற்காக விவசாயி பச்சையப்பன் என்பவரிடம் பல லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டு செல்லக்குட்டியின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சோமாசிப்பாடி ஏரியில் விவசாய நிலத்திலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து மீன்பிடிக்கும் சம்பவத்தை பொதுப்பணித்துறை அலுவலர்களும், சோமாசிப்பாடி கிராம நிர்வாக அலுவலரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்ததால் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


திருவண்ணாமலை: ஏரியில் மீன்பிடிக்க சென்ற கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

 

மேலும் கூலித் தொழிலாளி மீன் பிடிக்கும் போது மின்சாரம் தாக்கி பலியான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்யாமல் விவசாயி பச்சையப்பனிடம் கையூட்டு பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இறப்பிற்கு என்ன காரணம் என்று கூட ஆராயாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget