மேலும் அறிய

திருவண்ணாமலை: மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி

மோசடியாக தனது வீடு, நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொண்ட மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரக் கோரி முதியவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாரந்தோறும் மக்கள் மனு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் வளாகத்தில் தனது வீடு மற்றும் நிலத்தை , தன்னுடைய மகனிடம் இருந்து மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி என தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற நபர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுக்க சாத்து பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன் வயது (85), இவருடைய மனைவி தும்பா வயது (60), இவர்களுக்கு ரமேஷ் மற்றும் பன்னீர்செல்வம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரமேஷ் மனைவி சரிதா இவர்களுக்கு தமிழரசன் வயது (13), குணா வயது (11) என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரமேஷின் மனைவி சரிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2019-ம் அக்டோபர் மாதம் இறந்து விடுகிறார்.

திருவண்ணாமலை: மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில், இறந்து போன சரிதாவின் உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் ரமேஷின் இரு மகன்களான தமிழரசன் மற்றும் குணா ஆகிய இருவருக்கும் வீடு நிலம் எழுதி வைக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனால் சுப்பராயன் தனது மூத்த மகன் ரமேஷை நம்பி செட்டில்மெண்டாக நிலத்தின் ஒரு பகுதியையும், வீட்டின் ஒரு பகுதியையும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுப்பராயன் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து மூத்த மகன் ரமேஷ் மோசடியாக செட்டில்மெண்டை கிரைய பத்திரமாக தயார் செய்து, தனது தம்பிக்கு சேர வேண்டிய சொத்தை தனது தந்தையை ஏமாற்றி மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளார் எனவும், பத்திரம் பதிவு செய்து கொண்ட நாள் முதல் இதுவரை வயதான சுப்புராயன் மற்றும் அவரது மனைவி சரிதா இருவருக்கும் இருப்பிடம் மற்றும் உணவு உடைகள் உள்ளிட்டவை வழங்காமல் அலைக்கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சுப்பராயன் அவரது மனைவி தும்பா ஆகிய இருவரும்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலியாக பத்திரம் பதிவு செய்து கொடுத்த நிலத்தை மீட்டு தரக்கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை அறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை தடுத்து நிறுத்தி முதியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை: மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே போன்று தொடர்ச்சியாக வாரம்தோறும் தங்களுடைய பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயல்கின்றனர். ஆனால் அவர்கள் மீது திடீரென தீப்பற்றி கொண்டால் அணைப்பதற்கு அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும், அவர்களை காப்பாற்றுவதற்கு காவல்துறையிடம் எந்தவித உபகரணமும் இன்றி குறைந்த அளவே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அப்பகுதியில்  தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget