மேலும் அறிய

திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 4 பேர் கைது

திருவண்ணாமலை அருகே 3 சரக்கு வாகனங்களில் நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 நபர்களை காவல்துறையினர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அருணகிரி இவர், அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர் விடுதியில் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி, தோப்பூர் மற்றும் கல்யாணமந்தை ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவு அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல சரக்கு வேனில் ஏற்றி கொண்டிருந்த போது உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து பறிமுதல் செய்தனர். 

திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 4 பேர் கைது

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருணகிரி மற்றும் சாந்தி ஆகியோர் தலைமறைவாகினர். மேலும் சாந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அந்த குழுவினர் ஜமுனாமரத்தூரில் முகாமிட்டு சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தி பணியாற்றிய கல்யாணமந்தை பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பதுக்கி வைத்திருந்த 60 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் அந்த சமுதாய கூடத்தில் உள்ள அறையை திறந்து சோதனை நடத்தினர். அதில் 51 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் 14 கோதுமை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்த அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இதற்கும், தலைமறைவான விற்பனையாளர் சாந்தி என்பவருக்கு தொடர்பு உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜமுனாமரத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 4 பேர் கைது

அதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த கொளக்குடி கிராமத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, நாமக்கல் மாவட்டத்துக்கு சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக வெறையூர் காவல்துறைக்கு நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கொளக்குடி கிராமத்தில் வெறையூர் காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களை காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த வாகனங்களில் 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து 3 வாகனங்களில் இருந்த 4 நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திருவண்ணாமலை திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் பிச்சாண்டி (46) என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து கடத்தி வந்ததும் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா (24), சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி (38), ஆனந்தன் (32) ஆகியோர் சரக்கு வாகன ஓட்டுநர் என்பது தெரியவந்தது. பின்னர் 6 டன் ரேஷன் அரிசி, 3 சரக்கு வாகனங்களையும் மற்றும் 4 நபர்களையும் திருவண்ணாமலை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் வெறையூர் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Embed widget