மேலும் அறிய

தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓர் ஆண்டு சிறை

செய்யாற்றில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் நடராஜன் வயது (50). இவர் பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரராக பணிப்புறிந்து  வருகிறார். இவர் கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பூதேரி புல்லவாக்கத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டுவதற்காகவும் மற்றும் செய்யாறு அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவு, பிரேத பரிசோதனை மற்றும் இதர கட்டிடங்களை கட்டியுள்ளார். இந்த கட்டிட மொத்த ஒப்பந்த தொகை ரூபாய் 2 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 512 ஆகும். அதில் 2 பணிகளுக்கான வைப்புத் தொகை மற்றும் காப்புத்தொகை ரூபாய் 8 லட்சத்து 47 ஆயிரத்து 500 பொதுப்பணித்துறையிடம் உள்ளது. இதனால் கடந்த 2010-ம் ஆண்டு நடராஜன் 2 ஒப்பந்த வேலைகளையும் முடித்துவிட்டு வைப்புத்தொகை மற்றும் காப்புத் தொகை பெறுவதற்காக  தடையில்லா சான்று கேட்டு (7-12-2011) அன்று செய்யாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அதிகாரி மாரியப்பா என்பவரை சந்தித்துள்ளார்.


தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓர் ஆண்டு சிறை

 

அதனைத்தொடர்ந்து அவரிடம் ரூபாய் 50 ஆயிரம் மற்றும் பெயர் குறிப்பிடாத காசோலை ரூபாய் 1 லட்சம் ஒன்றை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் தொழில் நுட்ப உதவியாளர் தமிழ்செல்வியை அணுகிய போது ரூபாய் 5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் வைப்புத் தொகை மற்றும் காப்புத் தொகையை விடுவிக்க தடையில்லா சான்று வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நடராஜன் லஞ்சம் கொடுத்து தடையில்லா சான்றிதழ் பெற விருப்பம் இல்லாததால் உடனடியாக (25-1-2012) அன்று வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை  அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் ரசாயனம் தடவப்பட்ட ‌5 ஆயிரம் ரூபாயை நடராஜனிடம் கொடுத்தனுப்பட்டது. செய்யாறு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் மறைந்து இருந்தனர்.


தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓர் ஆண்டு சிறை

அப்போது நடராஜன் செயற்பொறியாளர் மாரியப்பா மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் தமிழ்செல்வி ஆகியோரிடம்  லஞ்சப்பணம் பெறும் போது   ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் கையும், களவுமாக  பிடித்து கைது செய்தனர். மேலும் இருவரிடமும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். அதனையடுத்து இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட மாரியப்பா மற்றும் தமிழ்செல்வி ஆகியோருக்கு தலா 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் ‌உள்ள அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Embed widget